கடந்த சில நாட்களாக ஒரே கூட்டணியில் உள்ள அதிமுக ,பாஜக கட்சியினரிடையே கடும் வாக்குவாதமும்,மாறிமாறி விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை கடுமையாக விமர்சிக்கும் வகையில் பாஜக நிர்வாகி பேசியதாக கூறப்படும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு அடுத்த இடமான எதிர்க்கட்சி யார் என்பதற்கு அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் அனைத்தும் தாங்கள் தான் பிரதான எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம் என கூறிக்கொண்டு செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஒரே கூட்டணியில் உள்ள அதிமுக, பாஜக இடையே தற்போது வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் உரசல் ஏற்பட்டுள்ளது. எனினும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள், பாஜக தலைமை அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையென கூறி வருகின்றனர்.
அண்மையில் அதிமுக அமைப்புச்செயலாளர் பொன்னையன், ஏதோ ஒரு நூறு பேரை, ஆயிரம் பேரை கூட்டி ஒரு போராட்டத்தை நடத்துவதால் மட்டும் ஒரு கட்சி பிரதான எதிர்க்கட்சியாக மாறவும் முடியாது, வளரவும் முடியாது. வடமாநிலத்தவர்கள் தமிழகம் வந்து நீட் தேர்வுக்கு படித்து, அதில் வெற்றியும் பெற்று, தமிழக மாணவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிக்க வழிவகை செய்துவிட்டது ஒன்றிய அரசு. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறியிருந்தார்.
பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால், தூண் அளவுக்கு பதிலடி தருவோம். தமிழ்நாட்டில் அதிமுகதான் எதிர்க்கட்சி யாருடனும் கூட்டணி இல்லை, தனித்தே போட்டி என சொல்ல அதிமுக தயார். மற்ற கட்சியினர் தயாரா. நாங்கள் காக்கா கூட்டம் இல்லை கொள்கை கூட்டம். இரைகளை போட்டால் காக்கைகள் கூடத்தான் செய்யும். இரைகள் முடிந்து விட்டல் பறந்து விடும் என கூறினார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது அதிமுக, பாஜவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செல்போனில் பாஜக நிர்வாகி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
அந்த உரையாடலில், ஹலோ என்கிறார் அதற்கு யாரு என்று கேட்கிறார். அதற்கு அவர் செல்லூர் ராஜூ அண்ணனா என்கிறார். அதற்கு அவர் ஆமாம் என்றவுடன், அண்ணே வணக்கம் சுரேஷ்குமார் பேசுகிறேன். அண்ணனுடைய பேட்டி பார்த்தேன், அதில் அவங்க தூணை போட்டால், நாங்கள் துரும்பா போட்டிருவோம் என்று கூறியிருந்தீர்கள். உண்மையில் அது பெரிய இதுனே.. நல்லா இருந்ததுனே என்று கூறிவிட்டு அண்ணே ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோவில்ல திருநீர் ஏதோ விற்றுக் கொண்டு இருந்தீர்களோ என்று கூறினார்.
திருநீர் கடை இல்லை பிரசாத கடை கொஞ்ச நாள் என்று கூறுகிறார். அதன்பிறகு அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி சரியாண்ணே, நீங்க ஒரு 3ஆம் வகுப்பு படித்த ஒரு ஆள், நீங்க என்னவெல்லாம் சாதனை பண்ணீங்க.. என்னெல்லாம் செய்தீங்க என்பது எல்லாம் தெரியும். தெர்மகோல் விட்டு தமிழகத்தை அலற விட்டீங்க, நீங்கள் அவ்வளவு பெரிய விஞ்ஞானி சரியாண்ணே என்று பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது தொடர்பாகவும் சமகவலைளங்களில் கடும் விவாதம் எழுந்துள்ளது.
- போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கி தகவல் பொதுமக்கள் கவனமாக இருக்க […]
- தமிழக அரசினுடைய அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்ட முடியாது -ஓபிஎஸ்அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஒ பன்னீர் செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்அப்போது […]
- மெட்ரோ குடிநீர் லாரிகள் திடீர் ஸ்டிரைக்.. ஸ்தம்பித்தது சென்னைமெட்ரோ குடிநீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, […]
- மதுரை விமான நிலைய சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்புஅவனியாபுரம் ஜேஜே நகர் பகுதியில் சாலை,சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 100க்கும் […]
- மல்யுத்த வீராங்கனை போராட்டம் குறித்து மதுரையில் அண்ணாமலை பேட்டிதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து இண்டிகோ மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் மதுரை […]
- சதுரகிரிமலையில் நாளை முதல் 4 நாட்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிவைகாசி விசாகம் மற்றும் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நாளை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு […]
- பொன்னியின் செல்வன் படம் வந்ததால செங்கோல் தந்ததாக கூறி ஏமாற்ற பார்க்கிறார்கள் – என்.ராம்அதிகார மாற்றத்துக்காக செங்கோல் தந்ததாக கூறுவது கட்டுக்கதை என்று மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தெரிவித்துள்ளார். செங்கோல் […]
- ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் சிக்கியர் மீட்பு!..சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று இரவு பயணித்தவர் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் […]
- சாராயத்தை உரமாக பயன்படுத்தும் விவசாயிகள்மத்திய பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களில் அதிக விளைச்சலுக்காக மதுவை தண்ணீரில் கலந்து பருப்பு பயிர்களின் மீது […]
- இன்று முதல் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்பிளஸ் தேர்வில் மறுகூட்டல் மறுமதிப்பூட்டுக்கு விண்ணபிக்கும் மாணவர்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 […]
- 3 கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!..திருச்சி, தருமபுரி மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இது […]
- சாதாரண குடிமகனை விண்வெளிக்கு அனுப்பிய சீனாதனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ள 3-வது நாடு சீனா ஆகும். தற்போது […]
- செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சிமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.சென்னையில் 2ம் ஆண்டாக செம்மொழி […]
- 150 வயது வரை யாராவது வாழமுடியுமா?” – சரத்குமார் பதில்..!யாராவது 150 ஆண்டுகள் வாழ முடியுமா தனது பேச்சுக்கு சரத்குமார் புதிய விளக்கம் அளித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற […]
- 500 மதுபானக் கடைகள் மூடல் – ஜுன் 3ல் அறிவிப்புதமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு ஜூன்3ல் வெளியாக உள்ளது. கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு […]