சர்வதேச தரத்திலான அழகுக்கலை நிபுணர் பயிற்சியை வழங்கும் லாக்மே அகாடமி கோயம்புத்தூரில் புதிய கிளையைத் திறந்துள்ளது. தென்னிந்தியாவில் முதல்முறையாக அதிநவீன உபகரணங்களுடன் அமைந்துள்ள இந்தப் பயிற்சி மையத்தில், திறப்பு விழா அறிமுகச் சலுகையாக பயிற்சிக் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அழகுக்கலை நிபுணராக வேண்டுமென விரும்புவோரின் கனவுகளை நனவாக்கும் லாக்மே அகாடாமி, உலக தரத்திலான அழகுக்கலை பயிற்சியை வழங்குவதில் முதலிடம் வகிக்கிறது. அழகுக்கலை, உடல்நலன் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் தலைசிறந்த நிபுணர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கும் லாக்மே அகாடமி, இங்கு பயிற்சி பெறுவோரை சிறந்த அழகுக்கலை நிபுணர்களாக்குவதுடன், தொழில்முறை வல்லுநர்களாகவும் உருவாக்குகிறது.


குறிப்பாக, உலகம் முழுவதும் அதிநவீனக் கல்வி மற்றும் பயிற்சியை வழங்கும் அப்டெக் நிறுவனத்துடன் இணைந்து, அழகுக்கலையில் தலைசிறந்த பயிற்சியாளர்களுடன் செயல்படும் லாக்மே அகாடாமியில் பயிற்சி பெறுவோர், நவீன அழகுக்கலை மையங்கள், ஃபேஷன் போட்டோ-ஷூட் நிறுவனங்களில் மட்டுமின்றி, மணப்பெண் மற்றும் மணமகன் அலங்காரம், சினிமா, சின்னத்திரை மற்றும் சமூகவலைதளப் பிரபலங்களுக்கான தனித்துவ அலங்காரம் (செலிபிரிட்டி ஸ்டைலிஷ்ட் – மேக்அப் ஆர்டிஸ்ட்) மூலம் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற முடியும்.
தென்னிந்திய அளவில் எங்கும் இல்லாத அளவுக்கு, அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கோவை காந்திபுரத்தில் தொடங்கப்பட்டுள்ள லாக்மே அகாடாமி பயிற்சி மையத்தில் அழகு சாதனங்களைக் கையாளுதல், சிறப்பு சருமப் பராமரிப்பு, முடி அலங்காரம் மற்றும் பராமரிப்பு, ஒப்பனைக் கலை, நகங்கள் சீரமைப்பு மற்றும் அழகுபடுத்தல், உடல்நலன் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் சர்வதேச தரத்திலான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
லாக்மே அகாடமி திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட நட்சத்திரம் சைத்ரா ரெட்டி பங்கேற்றார். யான் அறக்கட்டளை பிரதீப்குமார், தொழிலதிபர் கே.வி.அரங்கசாமி, லாக்மே அகாடமி நிர்வாகி விஜயசூரியன், லஷ்மி மற்றும் சின்னத்திரை, சமூகவலைதளப் பிரபலங்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.




