சென்னை எழும்பூரில், இயக்குநர் பா. இரஞ்சித் துவக்கியிருக்கும் ‘நீலம் புக்ஸ்’ என்ற புத்தக விற்பனையகத்தை நடிகர் கமல்ஹாசன் நேற்றுகாலை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் பெரும் திரளான புத்தக வாசிப்பாளர்களும், ரசிகர் கூட்டமும், பத்திரிகை நண்பர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர். நீலம் புக்ஸ்’ புத்தக விற்பனையகம், அனைத்துவிதமான கலை, பண்பாட்டு, இலக்கிய செயல்பாடுகளுக்கான தளமாக இயங்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது
இந்த நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் பேசும்போது, “நேற்றுதான் நான் கமல் சாரை சந்தித்து, “இந்த நிகழ்ச்சிக்கு வர முடியுமா..?” என்று கேட்டேன். ஆனால் நான் தைரியமாக சென்றேன். காரணம் கமல் ஸாரை நான் சினிமா நிகழ்ச்சிகள் எதுக்கும் இதுவரைக்கும் அழைத்ததில்லை.


புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்ததுதான் என்னை சினிமாவை நோக்கி நகர்த்தியது. அப்படி வாசிக்கும்போது நமக்கு மிகப் பெரிய ஆளுமைகள் மீது நமக்கு ஆர்வம் ஏற்படும். அப்படிப்பட்ட ஒருவராகத்தான் நான் கமல் ஸாரை பார்க்கிறேன்.
கமல் ஸாரின் சினிமாக்களை கட்டம் கட்டமாக பிரித்தாலே, நாம் தமிழ் சினிமாவின் வளர்ச்சியை புரிந்து கொள்ள முடியும். எனக்கு அவருடைய எழுத்து பாணி பெரிய வியப்பை உண்டாக்கி இருக்கிறது., குறிப்பாக ‘விருமாண்டி’ படம். அவர் அந்தப் படத்தில் அப்படியான கட்டமைப்பை உருவாக்கினார்? எப்படி அவரால் அந்த வாழ்க்கையை உள் வாங்க முடிந்தது? என்பது எனக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. அதே போலதான் ‘மகாநதி’யும்..!
யதார்த்த சினிமாவை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததில் கமல் ஸாரின் பங்கும் மிக முக்கியமாக இருப்பதாக நான் பார்க்கிறேன். அதில் அவர் வெற்றியும் அடைந்திருக்கிறார். எல்லோரும் டிஜிட்டல் சினிமாவை கையிலெடுக்க பயந்த காலத்தில், முதன்முதலில் டிஜிட்டலை கையில் எடுத்தவர் கமல்ஹாசன்.
புத்தகங்கள் சாதாரண விஷயமல்ல குறிப்பாக அம்பேத்கரை நான் வாசித்த பின்னர்தான் நான் யார் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அந்தக் கேள்விகளுக்கான பதில்கள்தான் என்னுடைய படைப்புகள் ஒரு மனிதன் தன்னை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை நிச்சயமாக புத்தகங்கள் உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்.வீடியோவைவிடவும் எழுத்து பவர் ஃபுல்லானது என்று நான் நம்புகிறேன். எழுத்தில் இருக்கும் எல்லாவற்றையும் நம்மால் திரைப்படமாக மாற்ற முடியாது. இங்கு அரசியல் விழிப்புணர்வு சார்ந்த புத்தகங்கள் மட்டுமே இருக்கும்…” என்றார் பா.ரஞ்சித்.
- மதுரை மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழாமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழா மற்றும் […]
- அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை.?பிரச்சார பயணம்அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை என்ற கோள்வியோடு கன்னியாகுமரி,வேதாரண்யம்,ஓசூர்சென்னை என் நாங்கு […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உலக வனநாள், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி, சித்தர்கூடம்திருமங்கலம் […]
- மதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் நிகழ்ச்சிமதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் […]
- சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழாசோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 47 ஆம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது,ஜெனக […]
- இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்… சாமி பட வில்லன் நடிகர் பரபரப்பு வீடியோ..!!சாமி பட வில்லன் நடிகர் கோட்ட சீனிவாச ராவ் நான் சாகல இன்னும் உயிரோடு தான் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை […]
- யுகாதி தினத்தை முன்னிட்டு பஞ்சாங்க படனம்தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதியை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் அக்ரகாரம் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் வரதராஜ் […]
- டெல்லியில் நிலநடுக்க அனுபவம் நடிகை குஷ்பு பரபரப்பு ட்விட்ஆப்கானிஸ்தானில் எற்பட்ட நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்ட நிலையில், தான் உணர்ந்ததாக தமது ட்விட்டரில் நடிகை குஷ்பு […]
- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றம்திருப்பி அனுப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றி மீண்டும் ஆளுனருக்கு […]
- பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்…..விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்த […]
- ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புது சாதனை!உலக வன தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்படும் நிலையில் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் […]
- லைஃப்ஸ்டைல்வெல்லம் சேர்த்த இஞ்சி டீயின் நன்மைகள்:
- விழுப்புரத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!விழுப்புரத்தில் நேற்று திடீரென ஆலங்கட்டி மழை பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 143: ஐதே கம்ம யானே ஒய்யெனதரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்துஓரை […]