இந்திய குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதி முடிவடைகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, டெல்லி விக்யான் பவனில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தல் ஆணையம் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது;- தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதி ஜூலை 25-ம் தேதி பதவியேற்பார். இந்நிலையில், ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. ஜனாதிபதி தேர்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 ஆகும். நாடாளுமன்றம், மாநில சட்டசபைகளில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். மொத்தம் 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 4,120 சட்டப்பேரவை, மேலவை உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்கின்றனர். வேட்புமனு ஏற்கப்பட்ட 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது எம்எல்ஏக்கள் வேட்பாளரை முன்மொழிய வேண்டும். தேர்தல் ஆணையம் வழங்கும் பேனா மூலம் மட்டுமே வாக்களிக்க வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 15-ம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 29-ம் தேதி, ஜூன் 30-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜூலை 2-ம் தேதி கடைசி நாளாகும். இவ்வாறு அவர் அறிவித்தார்.
- ‘உன்னால் என்னால்’ விமர்சனம்சோனியா அகர்வால், டெல்லி கணேஷ், ராஜேஷ், ஆர். சுந்தர்ராஜன், ரவிமரியா, நெல்லை சிவா போன்ற முகம் […]
- மணலியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நேபாள ஆசாமிகள் கைது..!மணலியில் ஆன்லைன் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நேபாளத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மணலியில் […]
- ஜியோ மொபைல் டவரின் 2வது தளத்தை இடிக்கசென்னை ஐகோர்ட்டு உத்தரவு..!சென்னையில் முறையான அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள ஜியோ நிறுவன மொபைல் டவரின் 2வது தளத்தை இடிக்க […]
- மே மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் அதிகம் பேர் பயணம்..!சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 4 மாதங்களை விட, மே மாதம் அதிகமான பயணிகள் பயணம் […]
- சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா தொடக்கம்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.சங்கரன்கோவில் […]
- “காவிஆவி நடுவுல தேவி ” படத்தின் டிரெய்லரைசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்எழுச்சி இயக்குனர் வி.சி.குகநாதன் எழுத்தில் உருவாகி உள்ள ” காவி ஆவி நடுவுல தேவி” திரைப்படத்தின் […]
- மேகதாது விவகாரத்தில் தி.மு.க – காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது..,ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு..!கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசும், […]
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம்..!கன்னியாகுமரியில் கடற்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் இன்று […]
- நேர்த்தி என்பது நம்மிடம் இல்லை இயக்குநர் செல்வராகவன்‘என்.ஜி.கே’ படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செல்வராகவன் பகிர்ந்துள்ள ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது.செல்வராகவன் […]
- நாயகி பேசும் வசனமே மிரட்டல்..!” – நாயகன் சித்தார்த் பாராட்டு!பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷின் எழுத்து, […]
- இன்று உலக பெற்றோர்கள் தினம்..!உலக பெற்றோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 1 ஆம் தேதி அன்று […]
- இன்று இயந்திரங்களின் நான்கு-நிலை-சுழற்சி கண்டறிந்த..,நிக்கலாஸ் லெனார்ட் சாடி கார்னோட் பிறந்த தினம்நடைமுறை இயந்திரங்களின் அடிப்படையாக உள்ள பெரும் புகழ் வாய்ந்த கார்னோட்வின் நான்கு-நிலை-சுழற்சி கண்டறிந்த நிக்கலாஸ் லெனார்ட் […]
- சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில்..,அய்யனார் குதிரை எடுப்பு விழா..!மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில் அய்யனார் குதிரை எடுப்பு விழா விமர்சையாக நடைபெற்றது. […]
- சமயநல்லூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா..!சமயநல்லூர் அருகே தேனூர் கட்டப்புளி நகரில் முத்துமாரியம்மன் கோவில் வைகாசிதிருவிழா நடைபெற்றது. பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் […]
- குமரியில் அமைச்சரைக் கண்டித்து பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம்..!பாரதப் பிரதமர் நரேந்தி மோடியை அவதூறாக பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜை கண்டித்தும், அவரை […]