மதுரை: லேடி டோக் கல்லூரி, சமூக அறிவியல் துறை சார்பில் “நிலையான வளர்ச்சிக்கான தன்னார்வலர்கள் (ESG – சுற்றுச்சூழல், சமூக, ஆளுகை)”என்ற தலைப்பில் இனாரா–26 மாநில அளவிலான இடைக்கல்லூரி விழா சிறப்பாக நடைபெற்றது.

தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு நிலைத்த வளர்ச்சி மற்றும் இளைஞர் தன்னார்வத்தின் முக்கியத்துவம் குறித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்தனர்.
இவ்விழாவில் குறும்படம், புகைப்படம், திடீர் பேச்சு, கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட 14 போட்டிகள் நடத்தப்பட்டன. பங்கேற்ற மாணவர்கள் நிலைத்த வளர்ச்சி இலக்குகள், காலநிலை மாற்றம் மற்றும் நல்லாட்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வை வெளிப்படுத்தினர்.
நிறைவுவிழாவில், அல் அமீன் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், திரு. ஷேக் நபி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தன்னார்வ சேவையின் மாற்றுத் திறன் குறித்து உரையாற்றினார். துறைத் தலைவர் டாக்டர் ஜாய்ஸ் ஜான் மற்றும் SOPHIS கழக ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகள் மேடையில் கலந்துகொண்டனர்.
திரு. ஷேக் நபி ,மாணவர்களுக்கு கோப்பைகளை வழங்கினார்.மொத்த சாம்பியன் பட்டத்தை அமெரிக்கன் கல்லூரி பெற்றது.

இரண்டாம் இடத்தை தியாகராஜர் கல்லூரி பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இனாரா–26 விழா மாணவர்களிடையே சமூக பொறுப்பு மற்றும் நிலைத்த வளர்ச்சி சிந்தனையை வளர்க்கும் சிறந்த தளமாக அமைந்தது.






