என்னை அடிச்சா இருமடங்கு திருப்பி அடிப்பேன் என பிடிஆரைவிமர்சித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு.
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட நான் இயேசுநாதர் அல்ல. இருமடங்கு திருப்பி அடிப்பேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கிழக்கிந்திய கம்பெனியுடன் கொஞ்சிக் குலாவிய நீதிக்கட்சியின் வழியில் வந்த பிடிஆருக்கு என்னை விமர்சிக்க என்ன அருகதை இருக்கிறது? கிழக்கிந்திய கம்பெனிக்கும் நீதிக்கட்சிக்கும் இருந்த தொடர்பை தமிழக மக்கள் அறிவார்கள் பிடிஆர் குறித்து என்னுடை பதிவில் எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.