தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 15.08.2025 அன்று நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, அவர்களுக்கு நல்லாளுமை விருது வழங்கப்படும் என அறிவுறுத்தியதை தொடர்ந்து, 07.10.2025 அன்று சென்னை தலைமை செயலகத்தில் அரசு தலைமை செயலாளர் நா.முருகானந்தம், அவர்களிடமிருந்து விருதினை பெற்றுக்கொண்டார்.
