• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

உகாண்டாவில் பொதுமுடக்கம் நிறைவு!

உலகின் மிக நீண்ட பொதுமுடக்கம் அமலில் இருந்து வந்த உகாண்டாவில், அது நிறைவு பெற்று, திங்கள் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்!

வெகு மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் பல பகுதிகளில் இன்று காலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கம்பாலா உள்ளிட்ட நகரப் பகுதிகளில் சாலைகளில் பள்ளி மாணவர்கள் செல்லும் காட்சிகளைக் காண முடிந்தது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, சுமார் இரண்டு ஆண்டுகளாக உகாண்டாவில் பள்ளிகள் திறக்கப்படவேயில்லை. உலகிலேயே மிக நீண்ட பொதுமுடக்கமாக, (கடந்த 83 வாரங்களாக) பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் சுமார் பல லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.