• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ரயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல் : பெண் கைது

BySeenu

Feb 16, 2025

கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதில் பீகார் பெண்ணை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினரும், மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினரும் இணைந்து நடத்திய சோதனையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் கே. தேவராஜன், சிறப்பு ஆய்வாளர் டி. ஞானசேகரன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் பாட்னா – எர்ணாகுளம் விரைவு ரயிலில் வந்த பயணிகளை கண்காணித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, வெள்ளை நிற பாலித்தீன் பையுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒரு பெண்ணை பிடித்து சோதனை செய்தனர். அதில் சுமார் 14 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு சுமார் 7,00,000 ரூபாய் எனக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் மின்டா தேவி (38) என்றும் அவர் பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட மின்டா தேவி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஆகியவை கோயம்புத்தூர் நகர போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், மின்டா தேவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மார்ச் 5, 2025 வரை நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.