• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அய்யனார் கோவில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு…

ByKalamegam Viswanathan

Nov 8, 2023

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாகவே நல்ல மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து மழையின் காரணமாக அய்யனார் கோவில் ஆறு மற்றும் ராக்காச்சி அம்மன் கோவில் ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து அதிகரித்தது இருந்த நிலையில் நகர் பகுதியில் உள்ள மக்கள் அய்யனார் கோவில் ஆற்றில் குளிப்பதற்காக படை எடுத்தனர் வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் குளிப்பதற்கு தடை விதித்து இருந்த நிலையில் இன்று மாலை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.