விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தேமுதிகவின் “உள்ளம் தேடி இல்லம் நாடி” கேப்டன் ரத யாத்திரை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் சிவகாசி என்.ஆர்.கே.ஆர் சாலையிலிருந்து பைபாஸ் சந்திப்பு சாலை வரை ஊர்வலமாக வந்தனர்.
அப்போது அவர்களுக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் மேடையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,
விருதுநகர் என்றாலே கேப்டன் கோட்டை என்பதை விருதுநகர் நிரூபித்துள்ளது
இலங்கை வாழ் தமிழர்கள் கொடுத்த அன்பு பரிசுதான் நான் பிரச்சாரம் செய்யும் ரதம்
மக்கள் மீது கொண்ட அன்பினால் ரதத்தை பரிசாக கொடுத்துள்ளார்கள்
விருதுநகர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் விஜயபிரபாகர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார், ஆனால் அந்த வெற்றி மறைக்கப்பட்டுவிட்டது, நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது
விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியின் நிரந்தர வேட்பாளராக இருக்கிறார், இருந்து கொண்டே இருப்பார்.
வரும் தேர்தலில் எங்கு போட்டியிடுகிறார் என்பதை அனைவரின் ஆசிர்வாதத்தோடு அறிவிப்போம்
கடந்த தேர்தலில் பறிக்கப்பட்ட வெற்றி உறுதி செய்யப்பட்ட வெறியாக விஜய பிரபாகரனுக்கு மக்கள் தருவார்கள்.
பட்டாசு தொழிற்சாலை களில் விபத்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது
2026 தேர்தலுக்கு பின் பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்பட்டு மரணம் நடக்காமல் மக்களை தேமுதிக காப்பாற்றும், காப்பீடு தொகை பெற்றுத்தரும்.
தேமுதிக எந்த தொகுதியில் வெற்றி பெற்றாலும் அந்த தொகுதியை தமிழகத்தில் முதன்மை தொகுதியாக மாற்றி காட்டுவோம்
கேப்டன் நம்மைவிட்டு மறையவில்லை, கேப்டன் ஒருவர்தான் லட்சக்கணக்கான கேப்டன்களை உறுவாக்கிவிட்டு சென்றிருக்கிறார்
தேமுதிக கட்சியினரை கேப்டன் என அழைக்கும் வரலாறு தேமுதிக கட்சிக்கு மட்டுமே உள்ளது, திமுகவினரை பார்த்து யாரும் வாங்க கலைஞரே என்று அழைப்பதில்லை, அதிமுகவினரை பார்த்து யாரும் வாங்க ஜெயலலிதா என அழைப்பதில்லை

லட்சக்கணக்கான கேப்டன்களாக நீங்கள் இருக்கும்போது இந்த காட்சியை எந்த கொம்பானாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது
என் கடைக்கோடி தொண்டர்கள் நீங்கள இருக்கும் வரை ஒருவரால் கூட தேமுதிகவை தொட்டுப் பார்க்கவோ ஆட்டி அசைக்கவோ முடியாது.
பீரு, சோறு கொடுத்து கூட்டத்தை கூட்டும் அரசியல் கட்சிகள் மத்தியில் விஜயகாந்த்தின் அன்பிற்கு கட்டுப்பட்டு தேமுதிகவினர் கூட்டத்திற்கு வருகிறார்கள்
என் வாழ்நாள் இனி உங்களுக்காகவே, தொண்டர்கள்தான் என் உயிர்
2026 தேர்தல் உங்களுக்கான தேர்தல்
கூட்டணி குறித்து நான் என்ன முடிவு எடுப்பேன் என தொண்டர்கள் பயப்பட்ட வேண்டாம், நீங்கள் யாரை விரும்புகிறீர்கள் அவர்களுடன்தான் கூட்டணி அமைப்பேன், தொண்டர்கள் நிர்வாகிகள் விரும்பும் கூட்டணியை ரஅமைப்பேன்
முதல்கட்ட பிரச்சாரம் வரும் பிப்ரவரி 3ம் தேதியுடன் நிறைவு பெரும் நிலையில் சென்னைக்கு சென்று ஒரு வாரத்தில் கூட்டணி முடிவுகளை அறிவிப்பேன்
நான் முதல்வராக வேண்டும், துணை முதல்வராக வேண்டும் என தொண்டர்கள் ஆசைப்படுகிறீர்கள், ஆனால் உங்களை அரசு பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பதே எனது ஆசையாக உள்ளது என்றார்.
பின்னர் பேசிய விஜயபிரபாகரன்,
2021ல் அதிக வாக்குகளை பெற்று தேமுதிக 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஏன் வாக்கு குறைந்தது என்பதற்காண காரணத்தை நான் புரிந்து கொண்டேன்
2026 தேர்தலில் தேமுதிக எந்த கூட்டணிக்கு செல்கிறதோ அந்த கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்
தமிழகத்தில் ஒரே ஒரு பெண் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மட்டுமே தேமுதிக ஆதரவு தரும் கூட்டணிக்கு 234 தொகுதிகளிலும் ஆதரவு தர வேண்டும் கேட்பது என் உரிமை கொடுப்பது உங்கள் கடமை என்றார்.






