பழனி வழக்கறிஞர் தாக்கப்பட்டது கண்டித்து திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர்கள் நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) 2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி வழக்கறிஞர் சங்க உறுப்பினர் தனுஷ்பாலாஜி மீது கடந்த 16-ம் தேதி நடந்த கொலைவெறி தாக்குதலை கண்டித்தும், முறையாக நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும், முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும்
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர்கள் நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக தலைவர் குமரேசன் செயலாளர் செல்வராஜ் ஆகிய இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.