சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக யூனியன் சேர்மன் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர்கள் நெற்றியில் நாமமிட்டு வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர் .இதில் அதிமுக கவுன்சிலர்கள் 6பேரும், திமுக கவுன்சிலர்கள் 2 பேரும், தேமுதிக, காங்கிரஸ், கவுன்சிலர்கள் ஒருவரும் உள்ளனர். சிங்கம்புணரி ஊராட்சியில் கடந்த 4ஆண்டுகளுக்கும் மேலாகியும் எந்த ஒரு வளர்ச்சி பணிக்கும் நிதி ஒதுக்காதாலும் குறிப்பாக வட்டார வளர்ச்சி அதிகாரிகளும் தொடர்ந்து எங்களுக்கு எதிராக செயல்படுவதாலும் இதனால் வார்டு மக்களுக்கு எதுவுமே செய்ய முடியாமல் இருப்பதால் இதனை கண்டிக்கும் விதமாக ஊராட்சி அலுவலகம் முன்பு பெண் ஒன்றிய பெருந்தலைவர் திவ்யா பிரபு தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் 5 பேரும் ,திமுக கவுன்சிலர்கள் இரண்டு பேரும், காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒரு அதிமுக கவுன்சிலர் வெளியூர் சென்று விட்டதாலும், தேமுதிக கவுன்சிலர் ஒருவர் மட்டும் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை இதில் ஆண் ஒன்றிய கவுன்சிலர்கள் நெற்றில் நாமம் போட்டு வாயில் கருப்பு துணி கட்டியும், இதே போல் ஒன்றிய பெருந்தலைவர் திவ்யா பிரபுவும் வாயில் கருப்பு துணி கட்டி தனது குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்டர் அதிமுக யூனியன் தலைவருடன் இணைந்து திமுக கவுன்சிலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது திமுக ஒன்றிய கவுன்சிலர் உதயசூரியன் கூறும்போது திமுகவில் நான் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறேன் தற்போது ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகவும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எங்கள் பகுதிக்கு எந்த ஒரு நிதியும் ஒதுக்குவது இல்லை நானே பலமுறை அமைச்சரிடம் கூறிவிட்டேன் போராட்டமும் செய்து விட்டேன் ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால் திமுகவில் இருப்பதற்கே வெட்கப்படுகிறேன் என்றார்.