ராஜபாளையத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, கருப்பு கொடி காட்டுவதற்கு முயற்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் 50ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார். ராஜபாளையம் நகருக்கு வருகை தந்த தமிழக ஆளுநருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டுவதற்கு முயற்சி செய்தனர். ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டான பகுதியில், கட்சியின் நகர செயலாளர் மாரியப்பன் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டு வந்து கோ பேக் ஆளுநர் என்று முழக்கமிட்டனர். தமிழக அரசு இயற்றிய
ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காததை கண்டித்தும், நீட் தேர்வு ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்தும், தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டங்களுக்கு அனுமதி வழங்க மறுத்து, சட்டங்களை கிடப்பில் போட்டு வைத்திருப்பதை கண்டித்தும், பொதுவுடமை சிந்தாந்தம் எழுதி, பேசி வந்த மார்க்ஸ் அவர்களின் சிந்தனையை கேலி செய்யும் வகையில் ஆளுநர் அவதூறாக பேசியதை கண்டித்தும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் முழக்கங்களை எழுப்பினர். ஆளுநர் வரும்போது அவருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோ பேக் ரவி என்ற பதாகைகளுடன் ஊர்வலமாக சென்று கருப்பு கொடி காட்ட முயற்சி செய்த கம்யூனிஸ்ட் கட்சியினர் 60க்கும் மேற்பட்டவர்களை தடுத்து போலீசார் கைது செய்தனர். ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற சம்பவம், ராஜபாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
- புதிய நாடாளுமன்ற கட்டிடம்… சு.வெங்கடேசன் எம்.பி. அதிர்ச்சி தகவல்புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற கட்டிடம் குறித்த […]
- பள்ளிகள் திறப்பு- சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவுகோடை விடுமுறை முடிந்து ப ள்ளிகள் வரும் 7 ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் […]
- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]
- சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை […]
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]