• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவை காந்திபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தில் மர்ம நபர்கள் கொள்ளை..,

BySeenu

Nov 28, 2023

கோவை காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தங்க நகை விற்பனை நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 100 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்தாக கூறப்படுகிறது. இந்த சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்தில் மாநகர காவல்துறை துணை ஆணையர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மோப்ப நாய் உதவியுடனும் தடயவியல் சோதனை நிபுணர்களுடனும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.