• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவை பாஜக தலைவர் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பு..,

BySeenu

Oct 29, 2025

நேற்று துணை குடியரசு தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் முன்பு இரண்டு நபர்கள் வேகமாக இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர்

அனீஷ்ரகுமான், ஆஷிக் சென்றுள்ளார்கள்

காவல்துறையினர் பாதுகாப்பு கொடுப்பதில் கோட்டை விட்டுவிட்டார்கள் 1998 குண்டு வெடிப்பு குற்றவாளிகள் இருந்த பகுதி அந்த பகுதி கோட்டை ஈஸ்வரன் பகுதியில் மனித குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.

அவர்களை கைது செய்து ஜாமீனில் வெளியில் வராத அளவிற்கு வழக்கு பதிவு செய்ய வேண்டும் சாதாரண போக்குவரத்து வழக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது கலவரத்தை தூண்டும் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும்.

அவர்கள் மீது NIA விசாரணை நடத்த வேண்டும் அவர்களிடம் லேப்டாப் இருந்தது என கூறப்படுகிறது அதனை சாதாரண வழக்காக காவல்துறை கையாளுவதை நாங்கள் ஏற்க மாட்டோம்

அந்த சம்பவத்தை கண்டித்து இன்று மாலை சிவானந்தா காலணி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அந்த நபர்களுக்கு கார் குண்டு வெடிப்பு முபின் உடன் தொடர்பு இருப்பதாக கூறுகிறார்கள், எனவே இதனை தீவிரமாக விசாரிக்க வேண்டும்.