• Wed. May 15th, 2024

ஓய்வு எடுக்க புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

கடந்த சில மாதங்களாகவே தேர்தல் காரணமாக பரபரப்புடன் பணியாற்றி வந்த அரசியல் தலைவர்கள், கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதை ஒட்டி குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா கிளம்பி வருகின்றனர். அந்த வகையில், ஓய்வின்றி தினமும் பிரச்சாரம் செய்த தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், தேர்தல் முடிந்துள்ள நிலையில் சென்னையில் இருந்து மதுரைக்கு தனி விமானத்தில் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.

இன்று 29ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் கொடைக்கானல் செல்வதற்காக சென்னையில் இருந்து மதுரைக்கு தனி விமானத்தில் புறப்பட்டார். 5 நாட்கள் அங்குள்ள தனியார் சொகுசு தங்கும் விடுதியில் தங்கி ஓய்வெடுக்க உள்ளார் முதல்வர் ஸ்டாலின். முதல்வர் வருகையை ஒட்டி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் கொடைக்கானல் வத்தலக்குண்டு சாலையில் பராமரிப்பு பணிகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக முதல்வர் ஸ்டாலின், மாலத்தீவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 29ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார் ஸ்டாலின். அங்கிருந்து கார் மூலம் வத்தலக்குண்டு பிரதான சாலை வழியாக கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *