சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை ரூ 6025 கோடி செலவில் எரிவாயு குழாய்கள் பூமிக்கடியில் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது – பணி நிறைவு பெற்று தொழிற்சாலைகள் முதல் வீடுகள் வரை பைப்லைன் மூலம் எரிவாயு கிடைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக தலைவர் அசோகன் பேச்சு. – வாடிக்கையாளர்களுக்கு பைபர் (பிளாஸ்டிக்) காம்போ வடிவில் சிலிண்டர் விநியோகம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள இந்திய ஆயில் கார்ப்பரேஷன் கிடங்கில் , தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. முன்னதாக, ஐஓசி – யின் மாநில தலைவரும் , நிர்வாக இயக்குனருமான அசோகன் நிருபர்களை சந்தித்து பேசிய போது,
ரூபாய் 6025 கோடி செலவில் சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை பூமிக்கடியில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இக்குழாயில் எரிவாயு அனுப்புவதற்கான பணிகள் ஓரிரு மாதத்தில் நிறைவு பெறும் . தற்போது சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை இப்பணி நிறைவு பெற்றதாகவும், செங்கல்பட்டில் இருந்து திருச்சி , மதுரை, தூத்துக்குடி வரை இப்பணியில் விரைந்து முடிக்கப்பட்டு, இந்த எரிவாயு குழாய் மூலம் தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு எரிவாயு அனுப்பும் பணி துவங்கும் எனவும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மாநிலத் தலைவரும் நிர்வாக இயக்குனமான அசோகன் தெரிவித்தார். மேலும் தற்போது வீடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய சிலிண்டர் இரும்பினாலானதற்கு பதிலாக, பைபர் (பிளாஸ்டிக்) காம்போ வடிவில் ஐந்து கிலோ பத்து கிலோ சிலிண்டர்கள் தயார் செய்யப்பட்டு ,விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது . மேலும் இந்த சிலிண்டர் பெண்கள், குழந்தைகள் கையினால் எளிதில் தூக்க முடியும். இந்த சிலிண்டரில் எரிவாயு குறைய , குறைய அதன் அளவை பக்கவாட்டில் தெரிந்து கொள்ளலாம். இந்த பைபர் சிலிண்டரால் விபத்து ஏற்பட்டாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.இந்த சிலிண்டர் வாடிக்கையாளர் பெறுவதற்கு டெபாசிட் தொகையாக 10 கிலோவிற்கு ரூபாய் 3500/- செலுத்த வேண்டும் எனவும் அசோகன் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அந்த கிட்டங்கியில் , தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. அங்குள்ள பெட்ரோல் சேமிப்பு கலனில் கசிவு ஏற்படுவதை அறிந்து, எச்சரிக்கை அலாரம் அடித்தவுடன் ஆங்காங்கே பணியாளர்கள் அவர்களது பணியை துரிதமாக செயல்பட்டு, தீ விபத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் உண்மை சம்பவமாக நடத்தப்பட்டது..
- முக கவசம் அணிந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் – மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருபவர்கள் முகக் கவசம் அணியவில்லை என்றால் மருத்துவமனைக்குள் அனுமதி இல்லை, […]
- மஞ்சூர் பள்ளி மாணவி கட்டுரை போட்டியில் முதலிடம் மாவட்ட ஆட்சியர் பாராட்டுகட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மஞ்சூர் மாணவிக்கு கலெக்டர் பாராட்டுஉதகமண்டலம் NCMS அருகில் […]
- இன்று இந்தியர் ஒருவர் முதல்முதலாக விண்வெளிக்கு சென்ற நாள் -ராகேஷ் சர்மாராகேஷ் சர்மா சோயூஸ் வு-11 விண்கலத்தில் பயணித்து விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் […]
- ரோகினி திரையரங்கில் நடந்தது கண்டிக்கத்தக்க செயல்-துரை வைகோ பேட்டிராஜபாளையம் அருகே மதிமுக ஒன்றிய கழக செயலாளர் வேல்முருகன் தலைமையில் முறம்பில் செயல்படும் தனியார் முதியோர் […]
- திருவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஆளுநர் சுவாமி தரிசனம்திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் வந்திருந்து […]
- தஞ்சாவூரில் நிறுவுவதற்காக கன்னியாகுமரியில் தயாராகும் திருவள்ளூர் சிலைதஞ்சாவூர் தமிழ் தாய் அறக்கட்டளையில் நிறுவுவதற்காக எட்டடி உயர திருவள்ளூர் சிலை மயிலாடியில் தயாராகி வருகிறது.3000 […]
- கீழ்குந்தா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கீழ்குந்தா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது .பள்ளியின் […]
- ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டின் கோட்பாடுகள் சரியானது அல்ல -தமிழக ஆய்வாளர் பரபரப்பு தகவல்இயற்பியல் கோட்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் தமிழ்நாட்டில் ஆராய்ச்சிக்கு அனுமதிக்காக காத்திருக்கும் நீலகிரி விஞ்ஞானி!ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்று […]
- மதுரையில் காரில் இளைஞரை தரதரவென இழுத்து சென்று சாலையில் தூக்கி வீசிய கொடூர சம்பவம்இரு சக்கர வாகனத்தை மோதிய காரை வழிமறித்த இளைஞரை பிடித்து சாலையில் தரதரவென இழுத்துக் கொண்டு […]
- ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி, ஹாட்ஸ்டார் அடுத்த வலைத்தள தொடரை அறிவிப்புஇந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த வலைத்தள தொடரைஅறிவித்துள்ளது.இந்த வலைத்தள தொடரில் […]
- “கன்னி” படத்தில் மண்ணின் பெருமை, தொன்மை, பாரம்பரியம்யாரும் செல்லத் தயங்கும் இடங்களில், யாரும் படப்பிடிப்பு நடத்தத் திணறும் இடங்களில் தேடித் தேடி, படப்பிடிப்பு […]
- கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக […]
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]