• Sun. May 12th, 2024

தெருவோரங்களில் நிற்கும் கார்களுக்கு.., சென்னை மாநகராட்சியின் புதிய எச்சரிக்கை..!

Byவிஷா

Aug 18, 2023

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 15 நாட்களுக்கு மேல் சாலை மற்றும் தெருவோரங்களில் நிற்கும் வாகனங்கள் அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீண்ட நாட்களாக சாலை மற்றும் தெருவோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட பயன்பாடு அற்ற கார்களை உரிமையாளர்கள் உடனடியாக அகற்ற வேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு குப்பை கூட வளாகங்களில் வைக்கப்படும். பொதுமக்களும் இந்த பணிகளில் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *