ஆண்டிபட்டி பேரூராட்சியில் தினந்தோறும் குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு இடம் இல்லாததால் பேரூராட்சி நிர்வாகம் திணறல் .
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 50 ஆயிரம் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் .இங்கு வீடுகள் மற்றும் கடைகள், அலுவலகங்களில் தினந்தோறும் டன் கணக்கில் குப்பைகள் குவிகிறது. இந்த குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு பேரூராட்சி பகுதியில் அரசுக்கு சொந்தமான இடம் இல்லாததால், ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடந்த பல வருடங்களாக கொட்டி வருகின்றனர். மேலும் குறிப்பிட்ட அளவு மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியும் ஒருபுறம் நடந்து வருகிறது .இந்நிலையில் தற்போது தினந்தோறும் சேகரமாகும் குப்பை கழிவுகளை மீண்டும் மீண்டும் அதே இடத்தில் கொட்டி வருவதால் சுகாதார கேடு ஏற்பட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் கிராமங்களுக்கு செல்லும் பொது மக்களுக்கு நோய் பரப்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது நாய்கள் குப்பைகளை கிளறுவதாலும் மற்றும் வாகனங்கள் செல்லுவதால் சேகரமாகும் குப்பை தார் சாலை வரை நீண்டு வருகிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். அதே சமயம் மழை நேரங்களில் மிகவும் சுகாதார கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இதற்கு சரியான முடிவு எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர். மேலும் ராஜகோபாலன்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டிபட்டி பேரூராட்சி குப்பை கொட்டுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
- ஊர்வலம், ஆர்பாட்டம் நடித்த மதுரையில் தடை..!!மதுரையில் அடுத்த 15 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து […]
- ஒரு கால்டாக்ஸி டிரைவரின் ஒருநாள் வாழ்க்கை படமாகிறது! – “4554”மன்னன் ஸ்டுடியோஸ்சார்பில் டாக்டர்.பிரபா கர்ணன் தயாரிக்கும்‘4554’ திரைப்படத்தில்அஷோக் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ஷீலா நாயர் நடிக்க, […]
- இன்றைய ராசி பலன்மேஷம்-தாமதம் ரிஷபம்-ஆதாயம் மிதுனம்-சிந்தனை கடகம்-உழைப்பு சிம்மம்-உதவி கன்னி-பேராசை துலாம்-பயணம் விருச்சிகம்-விவேகம் தனுசு-களிப்பு மகரம்-ஏமாற்றம் கும்பம்-சாதனை மீனம்-விருத்தி
- ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது.. முதல்வர் ஸ்டாலின் வழங்கல்.. !இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதினை முதலமைச்சர் வழங்கினார். சுதந்திர […]
- சின்னத்திரை நடிகர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்புஆர்.ஆர்.ஆர். படத்தில் கொமரம்பீமாக நடித்த ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பிரபல […]
- ஆஸ்கர் போட்டியில் ஆர்ஆர்ஆர்ஆர்.ஆர்.ஆர். படத்தில் கொமரம்பீமாக நடித்த ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பிரபல […]
- இறுதிக்கட்ட படபிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகர் சிம்ஹாவின் புதிய திரைப்படமான ‘தடை உடை’ எனும் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 16: புணரின் புணராது பொருளே பொருள்வயிற்பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்செல்லினும், செல்லாய்ஆயினும், நல்லதற்குஉரியை- […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் • ஒவ்வொருவருக்கும் சுயமான சிந்தனைகள் தேவை.அடுத்தவர்களின் சிந்தனைகளை கேட்டு நாம் வாழ ஆரம்பித்தால்நம்மால் வாழ்க்கையில் […]
- திண்டுக்கல் சி. சீனிவாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக கழக பொருளாளரும், முன்னாள் […]
- பொது அறிவு வினா விடைகள்எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் நுரைப்பான் (ஃபோம்மைட்) ஐஸ் தயாரிக்கும் […]
- குறள் 278மனத்தது மாசாக மாண்டார் நீராடிமறைந்தொழுகு மாந்தர் பலர். பொருள் (மு.வ): மனத்தில் மாசு இருக்க, தவத்தால் […]
- ஒரே ஒரு தலைபாகை.. அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரதமர் மோடி..!!நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி வித்தியாசமான தலைப்பாகையுடன் வந்து […]
- சுதந்திர தின வாழ்த்தை வீடியோவுடன் தெரிவித்த எம்.பி.ராகுல் காந்தி..இந்திய சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் தனது வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்துள்ளார். நாடு […]
- அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது.. பிரதமர் மோடி பேச்சு..!!டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிறகு பிரதமர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, அனைவருக்கும் […]