ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் நிதி முழுவதும் திமுக கவுன்சிலர்கள் சிலர் மட்டும் பிரித்துக் கொண்டதை கண்டித்து அதிமுக மற்றும் பாமக கவுன்சிலர்கள் தமிழக அரசு நகராட்சி அதிகாரிகள் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம் நகராட்சியின் அவசர கூட்டம் கூட்ட அரங்கில் நேற்று மதியம் 12.45 மணி அளவில் நடைபெற்றது. நகராட்சி தலைவர் சுமதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் கருணாநிதி, ஆணையர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் சாவித்திரி வரவு செலவு உட்பட மன்ற விவாத பொருட்களை வாசிக்க தொடங்கியவுடன்.
அதிமுக நகர செயலாளரும் கவுன்சிலருமான செல்வராஜ் பொது நிதி சுமார் 63 லட்சம் கலைஞர் மேம்பாட்டு நிதி சுமார் 33 லட்சம் ஆக சுமார் ஒரு கோடிக்கு மேல் நிதியை 21 வார்டுகளிலும் பணிகளுக்கு ஒதுக்காமல். திமுக கவுன்சிலர்கள் ஆறு பேர் வார்டுகளில் மட்டுமே பணிகள் ஒரு கோடிக்கு மேல் பணம் முழுவதும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் நகரில் உள்ள ஏழு ஏரிகள் தூர்வாரி நடைபாதை உட்பட பணிகள் செய்ய வார்டு உறுப்பினர்களுக்கு தெரியாமல் சுமார் 8 கோடி ரூபாய்க்கு மேல் பணிகள் டெண்டர் விடப்பட்டுள்ளது. கடந்த கூட்டத் தொடரில் நகரில் பன்றியில் பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பிடித்த பன்றிகள் அனைத்தையும் விதிமுறைப்படி இலவசமாக வழங்கி பில் பெற வேண்டும் ஆனால் பிடிக்கப்பட்ட பன்றிகள் வெளி மாவட்டப் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டு ஊழல் நடைபெற்றுள்ளது.

இதை கண்டித்து நிதியை பாரபட்சம் இன்றி அனைத்து வார்டுகளுக்கும் பிரிக்கும் வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்ததை தொடர்ந்து, கவுன்சிலர் செல்வராஜ் தலைமையில், கவுன்சிலர்கள் சேகர், சுப்பிரமணியன், தங்கபாண்டியன் நான்கு அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாமக கவுன்சிலர் ஜோதிலட்சுமி வேண்டுமென்றே பெண்கள் வார்டுகள் புறக்கணித்துவிட்டு, திமுகவினர் தங்கள் வார்டுகளிலேயே நிதியை பிரித்துக் கொண்டது ஏற்க முடியாது அனைத்து வார்டுகளிலும் மக்கள் தேவைக்கு பிரிக்க வேண்டும் அதுவரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்ததை தொடர்ந்து கவுன்சிலர் பூபதி தலைமையில். கவுன்சிலர்கள் மனோன்மணி ஜோதிலட்சுமி என்று நான்கு பாமக கவுன்சிலர்களின் மூன்று பெண் கவுன்சிலர்கள் மட்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மன்ற வரவு செலவு விவாத பொருட்கள் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே நிறுத்தப்பட்டு கூட்டம் நிறைந்ததாக துணைத் தலைவர் கருணாநிதி தெரிவித்ததை தொடர்ந்து தலைவர் துணைத் தலைவர் ஆணையர் உட்பட அதிகாரிகள் மற்றும் திமுக கவுன்சிலர்கள் ஒரு பாமக கவுன்சிலர் ஒட்டுமொத்தமாக கூட்ட அரங்கில் இருந்து வெளியேறி சென்று விட்டனர். இதைத் தொடர்ந்து அதிமுக மற்றும் பாமக கவுன்சிலர்கள் ஏழு பேரும் நகராட்சி தலைவர் துணைத் தலைவர் ஆணையர் மற்றும் தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]
- மதுரை மாநகரில் அசுர வேகத்தில் பறக்கும் இருசக்கர வாகனங்கள்மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் அசுர வேகத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் பொதுமக்கள் […]
- மதுரையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குதமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கென செயல்படுத்தும் தனிச் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் […]
- சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக கருணாநிதி பிறந்தநாள் விழாசோழவந்தான் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி […]
- மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம்மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்.ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.மதுரை அருள்மிகு […]
- ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு …வீணாகும் தண்ணீர்ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சு அடித்து வீணாகி […]
- இன்றுபுரத மடிப்பு குறித்த ஆய்வாளர் தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம்புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக மிகவும் பெயர்பெற்ற தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம் இன்று […]
- 2 நாட்களுக்கு 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி […]
- மாரடைப்பால் உயிரிழந்த போதும் பயணிகள் உயிரை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்அருப்புக்கோட்டை அருகே, அரசு பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழப்பு…வண்டியை சாலையோரமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.மதுரை, […]
- மதுரையில் எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்மாநில உரிமைக்கு எதிரான கருப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது […]
- இன்று இன்ட்டெல் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்சு நினைவு நாள்இன்ட்டெல் (Intel) என்னும் கணினிச் சில்லுகள் செய்யும் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்சு நினைவு நாள் […]