• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி

ByKalamegam Viswanathan

Nov 24, 2024

சோழவந்தான் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி கள்ளக்காதலனுடன் கைது செய்யபட்டன.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ரயில் தண்டவாளத்தில் கடந்த 14ஆம் தேதி இரவு மர்மமான முறையில் ஒரு நபர் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தார். இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதலில் ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது. இது தொடர்பாக ஒட்டன்சத்திரம் பகுதியில் பதுங்கி இருந்த கொலையாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சோழவந்தான் அருகே இரும்பாடி ரயில்வே தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த நபர் ஒட்டன்சத்திரம் இடும்பன் குரும்ப பட்டியை சேர்ந்த எலக்ட்ரீசியன் சக்தி கணேஷ் வயது 30 என்பதும் அவர் குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் தினமும் அவருக்கும், அவரது மனைவி பரமேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அவர்களது வீட்டிலேயே தங்கி இருந்த தூரத்து உறவினரான எலெக்ட்ரிசியன் வேலை பார்த்து வந்த கண்ணன் என்பவருக்கும், பரமேஸ்வரிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து கள்ளக்காதல்கள் இருவரும் சேர்ந்து சக்தி கணேஷ் தீர்த்து கட்ட முடிவு செய்தனர். இதற்காக அவரை சோழவந்தான் அருகே அழைத்து வந்து மது அருந்த வைத்து பின்னர் போதையில் இருந்த அவரை கண்ணன் கொலை செய்து ரயில்வே தண்டவாளத்தில் தள்ளிவிட்டு சென்றதாக தெரிகிறது. விசாரணை முடிவில் கொலையாளி கண்ணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பரமேஸ்வரி ஆகிய இரண்டு நபர்களையும் கைது செய்த ரயில்வே போலீசார் அவர்களை மதுரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் சோழவந்தான் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.