• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

BySeenu

Jan 16, 2025

கோவையில் ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது !!!

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு உள்ள காட்டு யானைகள். கூட்டம், கூட்டமாகவும், குழுக்களாகவும் மற்றும் ஒற்றைக் காட்டு யானைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வந்து கொண்டு உள்ளது. இதனை தடுக்க வனத் துறையினரும் பல்வேறு குழுக்கள் அமைத்து கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர். இந்நிலையில் உணவு தேடி ஆக்ரோசமாக சுற்றி வரும் யானைகளை தடுக்கும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை தாக்கியும், சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர் கதையாகி உள்ளது. விவசாயிகளும், பொதுமக்களும் பல்வேறு வகையில் யானைகள் ஊருக்குள்ளும், விளைநிலங்களுக்குள்ளும் புகுந்து சேதத்தை ஏற்படுத்தாமல் தடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனை அடுத்து தமிழக முதல்வர் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சுற்று வட்டார கிராமப் பகுதிக்குள் யானைகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வராமல் தடுக்க வேலி அமைத்து நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து இருந்தார். அந்தப் பணிகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்றி தர வேண்டுமென தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு பெரியநாயக்கன் பாளையம் பழைய புதூர் பகுதியில் உள்ள மேட்டுத் தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி வேலுமணி (74) என்பவர் தோட்டத்திற்கு முன் புறம் உள்ள கேட்டை பூட்டுவதற்காக சென்று பூட்டிக் கொண்டு இருந்த போது அங்கு வந்த ஒற்றைக் காட்டு யானை அவரை தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறை மற்றும் பெரியநாயக்கன் பாளையம் காவல் துறையினர் வேலுமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வாழை மரங்களை தின்று கொண்டு இருந்த அந்த ஒற்றைக் காட்டு யானை அங்கு இருந்து சென்றது.

ஒற்றைக் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.