• Fri. Apr 26th, 2024

ஏ.சி யிலிருந்து பரவும் புதுவகை நோய்.. 4பேர் மரணம்

ByA.Tamilselvan

Sep 4, 2022

ஏசியிலிருந்து பவுவும் புதுவை நோய் காரணமாக அர்ஜென்டினாவில் 4 பேர் மரணமடைந்துள்ளனர்.கொரோனா தொற்றுக்கு பிறகு புதுபுது விதமான நோய்கள் பரவி வருவது அதிகரித்துவருகிறது.குரங்குஅம்மை, தக்காளி காய்ச்சல் என மனிதர்களை படாதபாடு படுத்துகிறது. இந்நிலையில் ஏசி மெஷின் மூலமாக பரவும் நோய் காரணமாக அர்ஜென்டினாவில் 4 பேர் மரணமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.லெஜியோனேயர்ஸ் என்பது பாக்டீரியாவால் ஏற்படும் தீவிரமான நிமோனியா.இந்த பாக்டீரியா அசுத்தமான நீர் அல்லது அசுத்தமான ஏர் கண்டிஷனிங் அமைப்புகளிலிருந்து உருவாகி பரவும் ..லெஜியோனேல்லா பாக்டீரியா கொண்ட சிறிய நீர்த்துளிகளை சுவாசிக்கும் போது தொற்று ஏற்பட்டு மக்கள் நோய்வாய்ப்படலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று ஏசி இல்லாத வீடுகள் இல்லை என்றநிலையில் பரவும் இந்தபுதுவகை நோய் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *