• Mon. May 13th, 2024

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ஆடை அலங்காரம், வீட்டு அலங்காரத்திற்கான பிரத்யேக மையம்

BySeenu

Mar 11, 2024

கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, புதுடெல்லி ஆடை அலங்காரம் மற்றும் வீட்டு அலங்காரத் துறை திறன் கவுன்சில் ஆகியோர் இணைந்து கல்லூரி வளாகத்தில் புதிய மையம் துவக்கம்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ஆடை அலங்காரம் மற்றும் வீட்டு அலங்காரத்திற்கான பிரத்யேக மையத்தை அமைப்பதற்கு புது டெல்லியில் உள்ள ஆடை அலங்காரம் மற்றும் வீட்டு அலங்காரத் துறை திறன் கவுன்சில் (AMHSSC) ஒப்புதல் அளித்துள்ளது.. இந்நிலையில் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய மையத்திற்கான துவக்க விழா கிருஷ்ணம்மாள் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.. முன்னதாக புதிய மையத்தை, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் செயலாளர் அதுல் குமார் திவாரி,மற்றும் ஆடை அலங்காரம் மற்றும் வீட்டு அலங்காரத் துறை திறன் கவுன்சில் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் சக்திவேல் ஆகியோர் திறந்து வைத்தனர்..தொடர்ந்து கல்லூரி அரங்கில் நடைபெற்ற விழாவில், கல்லூரியின் சேர் பெர்சன் டாக்டர் நந்தினி அனைவரையும் வரவேற்று பேசினார்..தொடர்ந்து விழாவில் பேசிய பத்மஸ்ரீ டாக்டர் சக்திவேல்,நாடு முழுவதும் உள்ள இது போன்ற திறன் கவுன்சில் பயிற்சி மையங்களில் அதிகம் பயிற்சி பெறுவது பெண்களே என்று குறிப்பிட்ட அவர்,,பனியன் ஏற்றுமதி வணிகத்திற்கு பெயர் போன திருப்பூர் மாவட்டத்திலும் பெண்களின் பங்களிப்பே அதிகம் என பெருமை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் செயலாளர் அதுல் குமார் திவாரி,தற்போது இந்த கல்லூரி வளாகத்தில் துவங்கி உள்ள திறன் பயிற்சி மையத்தை மாணவிகள் சரியான முறையில் பயன் படுத்தி கொள்ள வேண்டும் என கூறினார்.தொடர்ந்து அவர் பேசுகையில்,வளர்ந்து வரும்ஙஉலக நாடுகள் வரிசையில் டிஜிட்டல் திறனல மேம்பாட்டில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக குறிப்பிட்டார்..நிகழ்ச்சியின் இறுதியாக,கல்லூரியின் செயலாளர் டாக்டர் யசோதா தேவி நன்றியுரை வழங்கினார்..புதிதாக துவங்கப்பட்டுள்ள மையம் வாயிலாக,மாணவிகளின் ,திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் சந்தை பகுப்பாய்வு மாணவர் மற்றும் தொழில் திட்டங்கள் மூலம் புதிய தயாரிப்பு மேம்பாடு , ஸ்டார்ட் அப்களுக்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை மேம்படுத்தும் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *