• Tue. Jun 16th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

மதுரையில் வீடு புகுந்து 45 1/2 சவரன் கொள்ளை!

Byகுமார்

Mar 12, 2022

மதுரை வடக்கு ஆவணி மூல வீதியை சேர்ந்த விமலநாதன் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு தனது புதுமனை கட்டுமான பணிக்காக வெளியில் சென்றிருந்த வேலையில் அவரது வீடு புகுந்து சில மர்ம நபர்கள் வீடு பீரோவை உடைத்து அதிலிருந்து 45 1/2 சவரன் தங்கநகைகளை திருடி சென்றுள்ளனர்.

இதனைதொடர்ந்து மதுரை திலகர் திடல் போலீசாருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.