மதுரை மாவட்டம் மாடக்குளம் கிராமம் பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு பகுதி அமைந்துள்ள ஸ்ரீ விக்னராஜ கணபதி திருக்கோவில் விநாயகர் சதுர்த்தி விழாவானது மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் விநாயகர் பால் தயிர் பணிகள் மற்றும் விபூதி பன்னீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்து விநாயகருக்கு சந்தன காப்பு சாத்தப்பட்டது. இதில் அப்பகுதியில் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ விக்னராஜன கணபதியின் அருளை பெற்று சென்றனர்.
மேலும் வந்திருக்க பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதங்களும் வழங்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் இறையருள் பெற்று சென்றனர்.









