• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

காவல் ஆய்வாளரைச் சுற்றி பரபரப்பான சர்ச்சை..,

ByPrabhu Sekar

Nov 17, 2025

சென்னை துரைப்பாக்கம் காவல் ஆய்வாளரைச் சுற்றி பரபரப்பான சர்ச்சை வெடித்துள்ளது. பெருங்குடியில் உள்ள ஒரு பிரபல தனியார் உணவகம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பில்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

வாரத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில், மாதத்திற்கு 40 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் “ஓசியில்” — அதாவது பணம் செலுத்தாமல் — உணவு வாங்கி வந்ததாக அந்த பில்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆய்வாளர் பிரபுவின் பெயர் நேரடியாக பில்களில் பதிவாக இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

உணவக நிர்வாகத்தின் தகவலின்படி, இந்த அளவுக்கு அதிகமான ஓசி உணவை தொடர்ந்து வழங்க இயலாத நிலை ஏற்பட்டதால், அவர்கள் இதை கட்டுப்படுத்த முயன்றுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த ஆய்வாளர், உணவகத்தின் முன்புறத்தில் வாகனங்களை நிறுத்த விடாமல் போர்டு வைப்பது போன்ற அழுத்த முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதன் பின்னணியில், உணவக நிர்வாகம் ஆய்வாளர் பெற்றதாகக் கூறப்படும் ஓசி பில்களை சமூக வலைதளங்களில் பரப்பத் தொடங்கியதால், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து பொதுமக்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.