• Thu. Oct 30th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

ஆசிரியர் மேம்பாட்டு கூட்டம்..,

ByK Kaliraj

Oct 29, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, “தேசியக் கல்விக் கொள்கை 2020: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” எனும் தலைப்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சி கல்லூரியின் பாடத்திட்டம் வடிவமைப்பு, மேம்பாட்டு அமைப்பு மற்றும் ஆங்கிலத் துறை ஆகிய இரண்டும் கூட்டாக ஒருங்கிணைத்து நடத்தின.

ஆங்கிலத் துறைத் தலைவர் மற்றும் கல்லூரி கல்வி விவகாரத் தலைவர், முனைவர் ச.ஃபெமினா வரவேற்புரை நிகழ்த்திச் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் பெ.கி.பாலமுருகன் தனது உரையில், தேசியக் கல்விக் கொள்கை 2020 கல்வித் துறையில் கொண்டு வரக்கூடிய முக்கிய மாற்றங்களைப் பற்றி விளக்கினார். தன்னாட்சி நிறுவனங்கள் தங்கள் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகளைப் பல்துறை, நெகிழ்வான மற்றும் முழுமையான கல்வி நோக்கிற்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்பதின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்விற்கு மதுரை அமெரிக்கன் கல்லூரியின் ஆங்கிலத் துறையின் முன்னாள் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியரான முனைவர் ஜே.ஜான் சேகர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர்தனது உரையில், உயர்கல்விக்கான தேசியக் கல்விக் கொள்கை 2020 வழங்கும் புதிய மாற்றங்களை விளக்கினார். பல்துறை கல்வி, நான்கு ஆண்டு நெகிழ்வான பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஒருங்கிணைப்பு, மற்றும் கல்விக் கடன் தேசிய வங்கியின் முக்கிய பங்கு ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார். இந்த அம்சங்கள் கள் இந்தியப் பல்கலைக்கழகங்களை புதுமைமிக்க மையங்களாக மாற்றும் ஒரு வழிகாட்டியாக உள்ளன என்றார். அதே நேரத்தில், ஆசிரியர் பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற முக்கிய சவால்களையும் அவர் வெளிப்படையாகக் குறிப்பிட்டார். முடிவில், அவர் இக்கொள்கையில் உள்ள விமர்சன சிந்தனை, உள்ளடக்கத்தன்மை, மற்றும் இந்திய அறிவு மரபுகளை ஊக்குவிக்கும் நோக்கங்களை விளக்கினார்.

இந்நிகழ்ச்சி, தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் முக்கிய கருத்துகளை ஆசிரியர்கள் அறிந்து பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கியது. இது கல்வி குறித்த பயனுள்ள விவாதத்தை உருவாக்கி, தேசியக் கல்விக் கொள்கையைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தும் திட்டமிடலுக்கு உதவியது. ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் திருமதி க.ஸ்வப்னா நன்றியுரை வழங்கினார். பேரா இந்நிகழ்வில் மொத்தம் 120 ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.