• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

மதுக்கடையை அகற்றக் கோரி பாமகவினர் மனு..,

ByA. Anthonisami

Oct 24, 2025

நாமக்கல் மாவட்டம் பாமக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் உமாசங்கர் தலைமையில் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர் அதில் கூறியிருப்பதாவது பள்ளிபாளையத்தில் தனியார் உயர்தர மதுபான விற்பனை கூடம் என்று பெயரில் அனுமதி பெற்று அதை சந்து கடை போல நடத்தி பொது பொது மக்களுக்கும் மருத்துவமனை மற்றும் வங்கிகளுக்கு வரும் பெண்களுக்குஇடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவே அந்த மது கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என புகார் மனு கொடுத்தனர்.இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.