• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மாணவர்களுக்கு சுதந்திரமாக மது விற்ற நபர் கைது..,

BySeenu

Aug 16, 2025

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள நீலாம்பூர் பகுதியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது விற்பனை நடைபெற்று வந்தது.

வினையடுத்து அப்பகுதி பொதுமக்கள் சூலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு ரோந்து சென்ற காவல் துறையினர். பதுக்கி வைத்து கள்ளச் சந்தையில் மது விற்ற நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

காவல் துறையிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பதும், அவர் அங்கு உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பொதுமக்களுக்கு அதிக லாபத்தில் கள்ளச் சந்தையில் பதுக்கி வைத்து மது விற்பனை

இதனை அடுத்து சதீஷை கைது செய்த காவல்துறையினர் அவர் சாக்கு மூட்டை பதுக்கி வைத்து இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.