• Sun. May 3rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை மெய்வழிச்சாலையில் தமிழக கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி…

ByS. SRIDHAR

Jul 1, 2025

தமிழக வெற்றி கழகத்தை நாங்கள் ஒரு கட்சியாகவே நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை எடுத்துக்கொண்ட பிறகு அவரது கருத்துகள் குறித்து பேசலாம்.

திருப்புவனம் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை. அண்ணா பல்கலைக்கழக விவாகரத்திலும், சிபிஐ விசாரணை வேண்டுமென்று கூறினார்கள். ஆனால் நாங்கள் முறையான விசாரணையை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தோம்.

அதே போல் திருப்புவனம் சம்பவத்திலும் உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்கள் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். லாக்கப் டெத் தொடர்பான புள்ளி விவரங்களை தேர்தல் அறிக்கையாக நாங்கள் கொடுப்போம். யார் ஆட்சியில் லாக்கப் டப் அதிகரித்தது என்பதை மக்கள் அறியாதவர்கள் அல்ல. சாத்தான்குளம் சம்பவத்தை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

லாக்கப் டெத்திதினால் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செல்வது போல் எங்கள் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது.