• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நீர்வழி புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படாது

Byவிஷா

May 13, 2025

குளம், ஏரி, ஆறு உள்ளிட்ட நீர் வழி பகுதிகளில் நீண்ட காலம் வசித்தாலும் அவர்களுக்கு பட்டா வழங்கப்படாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பமும் நகரமயமாவதும் வேகமெடுத்து வரும் இன்றைய உலகில், மக்கள் வசிக்கும் நிலத்தின் உரிமை என்பது அவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். ஆனால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு நிலங்களில் வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள், தங்கள் குடியிருப்புகளுக்கான சட்டபூர்வ உரிமையை உறுதி செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.
அரசின் நிலம், நீர்நிலங்கள், கோவில் நிலங்கள் உள்ளிட்ட பொதுப்பயன்பாட்டு பகுதிகளில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் மக்கள், தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுப்பது தொடர்கதையாகவே மாறியுள்ளது. இந்த நிலைமையில், அரசு நிலங்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பான சட்டங்கள், நெறிமுறைகள் மற்றும் அரசின் நிலைப்பாடு மக்களுக்கும் சமூக நீதிக்கும் இடையே சரியான சமநிலையை நிலைநிறுத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது.
அதே நேரத்தில் குறிப்பிட்ட வகை நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படாது என வருவாய் துறை அதிகாரிகள் எச்சரித்திருக்கின்றனர். அந்த வகையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி குளம், ஏரி, ஆறு உள்ளிட்ட நீர் வழி புறம்போக்கு பகுதிகளில் நீண்ட காலமாக வசித்தாலும், அவர்களுக்கு பட்டா வழங்கப்படாது.
மேலும் நீர்வழி புறம்போக்கு நிலங்களில் வசித்து வருவது கண்டறியப்பட்டால் அந்த நிலங்கள் அரசின் மூலம் எடுத்துக் கொள்ளப்படுவதோடு ஆக்கிரமிப்புகள் முழுமையாக இடித்து அகற்றப்படும் என எச்சரிக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் கோவில் நிலங்கள், நீர்நிலை, மேய்ச்சல் நிலம் மற்றும் உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலங்களில் வசித்தாலும் பட்டா வழங்கப்படாது.
மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அந்த நிலத்தில் வசித்து இருக்க வேண்டும், மூன்று லட்சத்திற்கும் குறைவான வருமானம் இருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளுக்கு கட்டுப்படுபவர்களுக்கு மட்டுமே பட்டா வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.