• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாலிதீன் பைகள் பறிமுதல் செய்து அழித்தல்

ByG.Suresh

Nov 29, 2024

சிவகங்கை நகராட்சியில் 300 கிலோ பாலிதீன் பைகள் பறிமுதல் செய்து நகர் மன்ற தலைவர், ஆணையாளர், சுகாதார அலுவலர் முன்னிலையில் அழிக்கப்பட்டது.

சிவகங்கையில் 2 வீடுகளில் பாலிதீன் பைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக வந்த புகார் எழுந்தது. இதையடுத்து
சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் உத்தரவின் பேரில் , ஆணையாளர் உத்தரவின்படியும் சிவகங்கை நகர் பகுதிகளில் உள்ள தேநீர் கடை,பெட்டிக்கடை ஆகிய கடைகளில் நகராட்சி சுகாதார அலுவலர் அப்துல்ஜப்பார், உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது 2 வீடுகளில் இருந்து 300 கிலோ பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை விற்பனை செய்த இருவருக்கு தலா ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்த பாலிதீன் பைகளை நகர் மன்ற தலைவர், ஆணையாளர், சுகாதார அலுவலர் முன்னிலையில் அழிக்கப்பட்டது…