• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கழக நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் வேஷ்டி, சேலை இனிப்பு

BySeenu

Oct 30, 2024

தேசிய முற்போக்கு திராவிட கழகம் பத்மபூசன் கேப்டன் விஜயகாந்த் அருள் ஆசியோடும் பொதுசெயலாளர் அண்ணியார் நல்ஆசியோடு்ம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி கழக செயலாளர் வி.பன்னீர்செல்வம் தலைமையில் 26 ஆவது வட்ட கழகம் சார்பாக 26வது வட்டக் கழக செயலாளர் சிட்டி கே. ராமச்சந்திரன் ஏற்பாட்டில் தீபாவளி திருநாளை முன்னிட்டு, கழக நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் வேஷ்டி சேலை இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி முன்னதாக பட்டாசு வெடித்து வானவேடிக்கை நிகழ்த்தி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் சிங்கை கே. சந்துரு மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.எஸ். கோவிந்தராஜ், பீளமேடு பகுதி அவைத்தலைவர் G. சக்திவேல், துணைச் செயலாளர்கள் R. வடிவேல், B.ராஜேஷ், S.தங்கவேல் பீளமேடு பகுதி மகளிர் அணி செயலாளர் சிட்டி R.அழகுராணி, 27 வது வட்டக் கழக செயலாளர் k.முனியப்பிள்ளை, மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் RK செல்வம், மகளிர் அணி துணைச் செயலாளர் MS அன்னபூரணி ,பீளமேடு பகுதி துணைச் செயலாளர் M. முத்தம்மாள், 26வது வட்டக்கழக அவைத் தலைவர் B. ரமேஷ்பாபு, பொருளாளர் k தனபால், துணைச் செயலாளர் G.விஜயகுமார், m நதியா, பிரதிநிதி எம். மணிகண்டன், கிளை கழகச் செயலாளர்கள் V.கண்ணன் k.சுப்புராஜ் A அம்சான் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மகளிர் அணி நிர்வாகிகள்,பொதுமக்கள், ஏராளமான தேமுதிகவினர் கலந்து கொண்டனர்.