தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் கொடைக்கானல், ராமேசுவரத்தில் விரைவில் ஹெலிகாப்டர் தளம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சுற்றுலாத்துறையின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் சென்னையில் சுற்றுலாத்துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில், தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் கொடைக்கானல், ராமேசுவரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்குவதற்காக ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியின் அழகை இரவிலும் ரசிக்க லேசர் உதவியுடன் ஒளியூட்டம் செய்ய முயற்சிகள், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் பார்வையாளர் மாடம், முதலியார்குப்பம் படகு குழாம் அருகில் ஓடியூர் ஏரியில் அமைந்துள்ள தீவுப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் படகில் செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதால் இங்கு ரூ.50 லட்சம் மதிப்பில் நீர் விளையாட்டுகள், கடற்கரை விளையாட்டுகள், தேநீர் விடுதி போன்ற வசதிகளை செய்வதற்கு அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது.
உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் ஈர்த்துள்ள, பிச்சாவரம் அலையாத்தி காடுகளை மேம்படுத்த, இங்கு பூங்கா, திறந்தவெளி முகாம், காட்சி கோபுரம், படகு குழாம், தங்கும் அறைகள், உணவகம் போன்றவற்றை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றம் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- போதைப்பொருள் கடத்தப்படுவதை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம்
- இராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா திருக்கொடியேற்றம்
- விவேகானந்த கல்லூரி, மாணவர் பண்பாட்டுப் பயிற்சி முகாம் தொடக்க நிகழ்ச்சி
- காலி குடங்களுடன் பொறியாளரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்..!
- துபாயில் இருந்து மதுரை வந்த நாகை வாலிபரிடம் 812 கிராம் கடத்தல் மீட்பு
- கோவை பிபிஜி கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- கே.எஃப்.சி சிக்கனில் ஸ்டீல் கம்பி..! புகைப்படங்கள் வைரல் !!!
- மேட்டுப்பாளையம் சாலையில் சுட்டெரிக்கும் வெயிலில் வாகன ஓட்டிகள் சற்றே இளைப்பாறும் வகையில் தற்காலிக கூரை
- குமாரபாளையம் பெண் திமுக வினரால் மிரட்டபடுவதாக போலீஸ் DSP அலுவலகத்தில் புகார்…
- கடைகள் அமைக்கப்பட்டு பாதிக்கப்படாத வகையில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை