இந்த ஆண்டு விழாவிற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட உரிமையியல் நீதிபதிஜெயப்பிரதா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முதன்மை கல்வி அலுவலர்பாலமுத்து கலந்து கொண்டார்.
பின்னர் 6 முதல் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது. 10 மற்றும் 12 வது வகுப்பில் 100% தேர்ச்சி அடைய வைத்த ஆசிரியர்களுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டது. பின்னர் தனிநபர் நடனம், குழுநடனம், பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ,மாணவிகள், பெற்றோர்கள், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா , சாம்பவிகா பள்ளியின் தாளாளர் சேகர், சிவகங்கை தமிழ்ச்சங்க தலைவர் கண்ணப்பன், பட்டிமன்ற பேச்சாளர் கண்ணதாசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.