• Fri. Apr 26th, 2024

மாநகராட்சிகளில் 800 கோடி டெண்டர் முறைகேடு.. எஸ்.பி.வேலுமணிக்கு இறுகும் கிடுக்குப்பிடி!…

ByIlaMurugesan

Aug 10, 2021

முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி வீடு மற்றும் நிறுவனங்களில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் மாநகராட்சிகளில் நடைபெற்ற டெண்டர்களில் கிட்டத்தட்ட 800 கோடி அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் 464 கோடி டெண்டரில் நடைபெற்ற முறைகேடு கோவை மாநகராட்சியில் 346 கோடி டெண்டரில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து என கிட்டத்தட்ட 800 கோடி டெண்டர் முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த ஊழல் வழக்குகளில் மாநகராட்சி அதிகாரிகளை சாட்சிகளாக சேர்க்கவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டு உள்ளனர். ஏற்கனவே 3 பிரிவுகளில் 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை
சென்னையில் உள்ள எம்.எல்ஏ விடுதியில் வைத்து முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் குற்றவாளியாக வழக்கு பதியப்பட்டு அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரது நண்பர்கள் வீடுகளிலும் விசாரணை செய்து வருகிறார்கள். காலை 6 மணிக்கு துவங்கிய இந்த விசாரணை 4 மணி நேரமாக விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *