மணலிக்கரையில் உள்ள ஆலய திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த மிட்டாய் கடையின் ஊழியர் நேற்று இரவு கடையின் முன் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது பைக்கில் வந்த இருவர் தூங்கிக் கொண்டிருந்தவரின் செல்போன் மற்றும் பணத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது. திருடிவிட்டு சென்ற இருவரும் மீண்டும் வந்து சிறு கற்களை துணியில் கட்டி அவரை தாக்கியுள்ளனர்.கடையின் சிசிடிவியில் பதிவாகிய தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.