• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வ.புதூர் கிராமத்தில்ஶ்ரீ செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

ByN.Ravi

Sep 5, 2024

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள வ.புதூர் கிராமத்தில் அமைந்துள்ள
ஶ்ரீ செல்வவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மஹா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, சுதர்சன பூஜை, சுமங்கலி பூஜை, மஹா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜையுடன் யாக சாலையில் இருந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி காசி, கங்கை, அழகர்கோவில், ராமேஸ்வரம், உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து வானத்தில் கருடன் வட்டமிட புனித நீர் ஊற்றப்பட்டு விமான கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கும்பாபிஷேக விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் பூஜை மலர்களும் அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வ.புதூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.