• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை.., இருவர் கைது…

BySeenu

Mar 17, 2025

கோவை அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவரை கைது செய்தனர். தப்ப முயன்ற போது வழுக்கி விழுந்ததில் விபத்தில் சிக்கி இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஞாயிறன்று செட்டிபாளையம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், JJ நகர் மேம்பாலத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற தீபன்ராஜ் (23) மற்றும் கிருத்திக்ரோஷன் (21) ஆகிய இருவர் விபத்தில் சிக்கினர். அவர்களை சோதனை செய்த போது, 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் 3 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும், அவர்கள் செட்டிபாளையம், பேரூர், சரவணம்பட்டி, அபிராமபுரம், எமணிஸ்வரம், திருசூலி ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.
காவல்துறையினரிடம் இருந்து தப்ப முயன்ற தீபன்ராஜுக்கு வலது காலிலும், கிருத்திக் ரோஷனுக்கு வலது கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இருவரையும் போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

குற்றவாளிகளின் போதை பொருள் விற்பனை தொடர்பில் இருக்கும் நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனையில் அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக திருட்டு, வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.