மதுரை, திருமங்கலம் சார்பு நீதிமன்றம் மற்றும் சார்நிலை கருவூலம், அலுவலகத்துக்கு எதிரே குடிபோதையில் போதை பொருட்களை உட்கொண்டு, காலை முதல் மாலை வரை தஞ்சம் அடைந்துள்ள முதியோர்கள், அந்த வளாகத்தை சுற்றிலும் துர்நாற்றம் வீசும் அளவிற்கு , நோய் பரப்பும் நிலையில் அசுத்தப்படுத்தி வருவதால் , கேட்பாரற்று கிடக்கும் குடி போதை முதியவர்களை அப்புறப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீதிமன்றத்திற்கு வழக்கு ரீதியாக வரும் பொது மக்களும், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் கருவூல அலுவலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.