தமிழ் சினிமா கடந்த 2020 முதல் கடந்த இரண்டு வருடங்களாக தொழில்ரீதியாக கடுமையான பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகிறது 100% இருக்கைகளுடன் படங்களை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்த பின் வெளியான அண்ணாத்த, மாநாடு படங்கள் அதனதன் சக்திக்கு ஏற்ப திரையரங்குகளில் வசூலை குவித்தது அண்ணாத்த வணிகரீதியாக தோல்விப்படம் என்றாலும் 100% இருக்கை அனுமதி, அதிகமான திரையரங்குகளில் திரையிட்டதால் முதலுக்கு மோசமில்லாமல் சுமார் 40 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியது அதேபோன்று மாநாடு அள்ளிக் கொடுக்கவில்லை.
என்றாலும் தமிழக விலையான 12 கோடி ரூபாய் முதலீட்டை சேதாரமின்றி எடுக்க படம் ஓடினால் போதும் என்ற எதிர்பார்ப்பை பொய்யாக்கி திரையரங்குகளில் திருவிழா கூட்டத்தை மாநாடு படம் நிகழ்த்தியது எல்லோருக்கும் லாபகரமான படமாக அமைந்தது இனி எல்லாம் ஜெயமே 2022 ஜனவரியில் RRR, வலிமை, ராதேஷ்யாம், பிப்ரவரியில் எதற்கும் துணிந்தவன், ஏப்ரலில் பீஸ்ட் என முதல் காலாண்டில் திரையரங்குகளில் திருவிழா கூட்டம் இருக்கும் என தமிழ்சினிமா கனவுலகில் பயணித்துக்கொண்டிருந்தது கொரோனா மூன்றாவது அலை ஓமைக்ரான் உருவில் கனவுகளை கலைத்துப்போட்டிருக்கிறது நேற்று தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் கொரோனா வழிகாட்டு நெறிமுறை, கட்டுப்பாடு அடிப்படையில் திரையரங்குகளில் 50% இருக்கைகள் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் திரையரங்குகள், நடிகர் நடிகைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படபோவதில்லை சிறு முதலீட்டு படங்கள் பாதிகப்படாது 30 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் தயாரிக்கப்பட்டு முதல் மூன்று நாட்களில், முதல் வார முடிவிற்குள் முதலீட்டை வசூல் மூலம் பெற முயற்சிக்கும் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும் தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு எதிராக திரை துறையினர் கடுமையான விமர்சனங்களை வெளியிடத் தொடங்குவார்கள் ஆனால் தமிழ்நாட்டில் விஜய், அஜீத்குமார் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு மட்டுமே தலைநகரம் முதல் குக்கிராமம் வரை உள்ள திரையரங்குகளில் முதல் மூன்று நாட்கள், முதல் வாரம் முழுவதும் தியேட்டரில் உள்ள இருக்கைகளுக்கான டிக்கட்டுகளில்70% விற்பனை ஆகின்றது அது பின் 50%ம் அதற்கு குறைவாகவும் இருக்கும்.
இது தான் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளின் யதார்த்த நிலைமை நகரங்களில் இருக்கும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் டிக்கெட் மூலம் கிடைக்கும் வருவாயை காட்டிலும் படம் பார்க்க வருகின்ற பார்வையாளர்களிடம் உணவுப்பொருட்கள், பார்க்கிங் இவற்றின் மூலம் அதிகபட்ச வருமானத்தை மறைமுகமாக பெறுகின்றன இதற்கு 50% இருக்கை அனுமதி பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் மொத்தத்தில் ஆண்டின் தொடக்கத்தில் தியேட்டர்களில் 50% இருக்கை அனுமதி என்கிற கட்டுப்பாடு அதிர்ச்சியளிக்கலாம் ஆனால் இதனை காரணமாக வைத்து தயாரிப்பு செலவு, நடிகர் நடிகைகளின் சம்பளத்தை மறுஆய்வுக்கு உட்படுத்தி ஒழுங்குபடுத்தும் முயற்சியை தயாரிப்பாளர்கள் மேற்கொண்டால் தமிழ் சினிமாவில் மூலதன முடக்கம், தொடர்நஷ்டம் என்பது தவிர்க்கப்படலாம் என்பதே திரைப்பட வணிக ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
- வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட 7 பேர் மீது வழக்குவட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட ஏழு […]
- விவேகானந்தர் மண்டபம் படகு போக்குவரத்து கட்டண உயர்வை – சிபிஎம் கட்சியினர் மனுகன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறைக்கு […]
- அக நக முக நகையே..’ வந்தியத்தேவன்-குந்தவையின் அழகான காதல் பாடல் வெளியானதுலைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்–2’ திரைப்படம் வரும் […]
- ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை..,அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்..!சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு […]
- தமிழக ஆளுநரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு..!ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என தமிழக ஆளுநர் கூறிவந்த […]
- குறள் 407நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்மண்மாண் புனைபாவை யற்று. பொருள் (மு.வ): நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான […]
- அக்சய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் 27’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்புதமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் […]
- உச்ச நடிகையாக மாற்றம் கண்டுவரும் ஐஸ்வர்யா மேனன்தமிழ் படம் 2’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். […]
- தூத்துக்குடியில் களவு போன 13 சவரன் தங்க நகைகள் மீட்புதூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் […]
- தமிழக வேளாண் பட்ஜெட் -மதுரை மாவட்ட மல்லிகை பூ விவசாயிகள் வரவேற்புதமிழக வேளாண் பட்ஜெட்டில் மதுரை மல்லிகைப் பூ விவசாயத்தை மேம்படுத்த அறிவிப்பு வெளியிட்டதற்கு மதுரை மாவட்ட […]
- ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசுதிருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் “ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசு […]
- சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்“பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள நாங்கள் ஈஷாவின் உதவி இல்லாமல் கல்வி கற்று இருக்க […]
- பழனியில் தங்கும் விடுதிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வுபழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் பக்தர்கள் பழனியில் தங்கி முருகனை […]
- உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நடவுஉலக காடுகள் தினத்தை முன்னிட்டு உதகை சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவில் நகராட்சி கமிஷனர் காந்திராஜ் மரக்கன்றுகளை […]
- மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்நீலகிரி மாவட்டம் உதகை கிழக்கு மண்டல் தும்மனாடா கிராமத்தில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து […]