அன்னூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்த விவசாயிகள் 16 இடங்களில் தனி அலுவலகம் திறந்துள்ளனர்.
கோவை மாவட்டம் காரமடை, அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பெள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர் , அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் 3,850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.. இதனால் இப்பகுதியிலுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதையொட்டி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர் . இதனிடையே நமது நிலம் நமது விவசாயிகள் சங்கம் சார்பில் சிப்காட் தொடர்பாக தொழில் தொடங்க வருபவர்களை தடுத்து நிறுத்த 16 இடங்களில் அலுவலகம் திறந்தனர். இந்த அலுவலகங்களில் விவசாயிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.