வெளிநாடுகளில் ஓரே பாலினத்தை சேர்நதவர்கள் திருமணம் செய்துக்கொள்வது, தன்னைத்தானே திருமணம் செய்துக்கொள்வது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறும். இது சோஷியல் மீடியாவிலும் பரவும். அந்த வகையில் இந்தியாவில் தற்போது ஒரு சில இடங்களில் இரு பெண்கள் திருமணம் செய்தும் வருகின்றனர். தற்போது நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு இரு இளம்பெண்கள் திருமணம் செய்தனர்.
இந்த நிலையில், இந்தியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ள உள்ளார். குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து(24 ) என்ற இளம்பெண், எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி பட்டம் பெற்றுள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஷாமாவும் மற்ற இந்திய பெண்களைப் போலவே ஜூன் 11ஆம் தேதி நடைபெறவுள்ள தன்னுடைய திருமணத்துக்கும் தயாராகி வருகிறார். திருமணத்துக்கான பிரேத்யேக ஆடை மற்றும் அனைத்து சம்பிராதாயங்களும் இவருடைய திருமணத்தில் நடைபெறவுள்ளது. திருமண அழைப்பால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் பெரும் குழப்பத்தில் உள்ளனர். அதாவது, இந்த திருமணத்தில் மணமகன் மட்டுமே இல்லையே தவிர மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. மாப்பிள்ளை இல்லலாமல் தனியாக திருமணமான என்பது தான் அவர்களின் குழப்பம்.
இதை பற்றி ஷாமா பிந்து கூறியது, சிறு வயதில் இருந்தே திருமணம் மீது ஆர்வம் இல்லை. திருமணம் எனும் பாரம்பரியம் என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால், நான் ஒரு மணமகளாக வேண்டும் என விரும்பினேன். அதனால், என்னை நானே மணந்துகொள்ள முடிவு செய்தேன். இது சோலோகேமி என அழைக்கப்படுகிறது. ஒரு வெப்சீரிஸில் நடிகை ஒருவர் , எல்லா பெண்களும் மணமகளாக விரும்புகிறார்களே தவிர மனைவியாக அல்ல என பேசியிருப்பார். இதைக் கேட்டவுடன் என்னை நானே மணந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மீண்டும் தோன்றியது. இதுபோன்று இந்தியப் பெண்கள் யாராவது திருமணம் செய்திருக்கிறார்களா என்று ஆன்லைனில் தேடிப் பார்த்தேன். ஆனால், யாரும் அப்படி செய்துகொள்ளவில்லை. திருமணத்தைப் புனிதமாகக் கருதும் இந்திய நாட்டில் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் முதல் பெண் நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன். இந்த திருமணம் மூலம் என்னை நானே காதலிக்கப் போகிறேன். என்னுடைய பெற்றோர் இந்தத் திருமணத்தை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கும் இதில் மகிழ்ச்சிதான். எனது மெஹந்தி நிகழ்ச்சி ஜூன் 9ஆம் தேதியும், திருமணம் ஜூன் 11ஆம் தேதி மாலை 5 மணிக்கும் நடைபெறவுள்ளது என்றார். திருமணம் முடிந்த பின்னர் இரண்டு வாரம் கோவாவுக்கு ஹனிமூனுக்கு செல்ல உள்ளதாகவும் கூறியுள்ளார்.

- போலி பத்திரங்களை ரத்து செய்ய பதிவாளர்களுக்கு அதிகாரம்போலி பத்திரங்களை ரத்து செய்ய பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்ட மும்வடிவுக்கு ஒரு மாதத்தில் ஒன்றிய […]
- இயற்கையின் படைப்பில் மேகமலை … கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் வீடியோ…தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலை மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம், மேகமலை ஊராட்சியில் அமைந்துள்ளது இயற்கை […]
- ஓபிஎஸ் வந்தால் இபிஎஸ் வெளியேறுவார்ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் வருகிற 18-ந் […]
- உதய்பூர் கொலையாளிக்கு பாஜகவுடன் தொடர்பா?பரபரப்பு தகவல்
- என்.ஆர்.காங்-பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களிடம் திரெளபதி முர்மு ஆதரவு திரட்டினார்ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் வருகிற 18-ந் […]
- எல்ஐசி பங்கு விற்பனையை திரும்ப பெற வேண்டும்எல்ஐசி பங்கு விற்பனையை திரும்ப பெற வேண்டும் என மதுரையில் எல்ஐசி ஊழியர் சங்க மாநாட்டில் […]
- இந்து முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்தேனி மாவட்டம் அரண்மனை புதூரில் இந்து முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றதுதேனி மாவட்டம் […]
- திருக்குறள்குறள் 238: வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்எச்சம் பெறாஅ விடின் பொருள் (மு.வ): தமக்குப் பின் […]
- படித்ததில் பிடித்ததுஇருளை நேசி விடியல் தெரியும்..தோல்வியை நேசி..வெற்றி தெரியும்.. உழைப்பை நேசி..உயர்வு தெரியும்.. உன்னை நீ நேசி..உலகம் […]
- பொது அறிவு வினா-விடைஉலகைச்சுற்றி விமானத்தில் முதன்முறையாக பறந்தவர் யார்? ஸ்குவாட்ரன் லீடர் கிங்க்ஸ்போர்ட் ஸ்மித் ஒரு ஆண்டுக்கு 365 […]
- கடந்த 10 ஆண்டுகளில் 80 காவல்நிலைய மரணங்கள்கடந்த 10ஆண்டுகளில் 80காவல்நிலைய மரண வழக்குகளில் 12 வழக்குகளில் மட்டுமே காவல்துறையினர் மீது தவறு உள்ளதால் […]
- சோமேட்டோவிலிருந்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த அனிரூத்..தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத். இவர் இசையமைப்பில் இந்த ஆண்டு வெளியான […]
- கோயம்பேடு இல்லை… கிளாம்பாக்கம் வாங்க…சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நெருக்கடியை குறைக்க வண்டலூரை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் […]
- ஓபிஎஸ் தொண்டர்கள் அதிரடி- அதிர்ச்சியில் இபிஎஸ்சேலத்தில் ஓபிஎஸ் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்களால் அதிர்ச்சியில் இபிஎஸ் தரப்பு இருப்பதாக தகவல்அதிமுகவில் ஒற்றை தலைமை […]
- மக்களிடம் மைக்கை நீட்டி பாருங்கள் – முதலமைச்சர் ஸ்டாலின்கரூரில் நடைபெற்ற நிகழச்சியில் மக்களிடம் மைக்கை நீட்டி பாருங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுகரூரில் நடைபெற்ற […]