விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியீட்டில் பிப்ரவரி 11-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ‘எஃப்.ஐ.ஆர்.(FIR)’.
‘ராட்சசன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், இப்படமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி அடைந்துள்ளது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக் குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த விழாவில் படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் பேசும்போது, “இந்த நாள் ரொம்பவும் சந்தோஷமான நாள். மீடியாக்கள் தரும் ஆதரவை நான் என்றும் மறக்கவே மாட்டேன். விஷ்ணு விஷால் அடுத்த லெவலுக்கு போய்விட்டார் என எல்லோரும் பாராட்டியிருந்தார்கள், அதற்கு காரணம் இந்தப் படத்தின் இயக்குநர் மனுதான். உங்களுக்கும், மனுவுக்கும் எனது நன்றி. நான் மனுவிடம் இந்தப் படத்தின் கதை பற்றிக் கேட்டபோது அந்த நேரத்தில் ‘ஃபேமிலிமேன்’ சீரீஸ், ‘மாநாடு’ படமெல்லாம் வெளியாகியிருக்கவில்லை. அவைகள் வந்தபோதும் மனுவை அழைத்து பேசினேன். என்னிடம் அப்போது இரண்டு சாய்ஸ் இருந்தது. ஆனால், நான் துணிந்து தயாரித்தேன். ஏற்கனவே இப்படத்தை ஒரு தயாரிப்பாளர் தயாரிக்க மறுத்து, மீண்டும் இப்படத்தை நிறுத்தினால் ஒரு டைரக்டருக்கு என்ன நடக்குமென எனக்கு தெரியும். அதனால் நான் இதை தயாரித்தே தீருவது என முடிவு செய்தேன். ராட்சசனு’க்கு பிறகு நடிகராக இது எனக்கு இராண்டாவது வாய்ப்பு. ஆனால், அதை வெற்றியாக சாதித்து காட்டிய மனுவுக்கு நன்றி.
உதயநிதி ஸ்டாலினுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. ‘மைனா’ படத்தின் வெற்றி விழாவிற்கு போனபோது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ எனது படத்தை விநியோகம் பண்ணுவார்களா? என்ற ஆசை இருந்தது. ‘நீர்ப்பறவை’ முதல் இப்போதுவரை எனக்குப் பெரிய ஆதரவினை அந்த நிறுவனத்தினர் தந்துள்ளார்கள். அவர்கள் அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி. என் படத்தில் மூன்று நாயகிகள் நடித்துள்ளார்கள். ஆனால், இந்தப் படம் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்குக்கூட மூன்று பேரையும் என்னால் ஒன்றாக இணைக்க முடியவில்லை. அது ஒரு சின்ன கவலையாக எனக்குள் இப்போதும் உள்ளது.
இங்கே பேசிய எல்லோரும் “நான் சரியான நேரத்தில் சம்பளத்தைக் கொடுத்தேன்” என்றார்கள். ஆனால், அதன் பின்னால் இருந்த கஷ்டம் எனக்கு மட்டும்தான் தெரியும், இந்தப் படம் ஒரு கட்டத்தில் பெரிய பட்ஜெட்டாக வந்து நின்ற நேரத்தில், கடுமையான சிக்கல் உண்டானது, அப்பா வந்து ‘யாரிடமும் கடன் வாங்காதே’ என்று அறிவுறுத்தி அவரது பென்சன் பணத்தை தந்து உதவினார்.. அவருக்கு நன்றி…” என்றார்.
- போக்சோ தண்டனையில் விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைதுஜெயங்கொண்டம் அருகே போக்சோ சட்டத்தில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைது […]
- கழுத்து கருமை நீங்க:சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிதளவு வெங்காயச் சாறு, இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் மற்றும் பயத்தமாவு கலந்து […]
- டென்மார்க்கில் 25 வயதிற்குள் திருமணம் ஆகவில்லையென்றால் இதுதான் சம்பிரதாயமாம்…இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. […]
- முளைகட்டிய கோதுமை இனிப்புப் புட்டு:தேவையானவை:கோதுமை – ஒரு கப் நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு நெய் – சிறிதளவு […]
- கலைஞர் கருணாநிதி திரு உருவ சிலை திறக்கப்படும் நாள் அனைவருக்கும் தித்திப்பான நாள்… ஸ்டாலின் நெகிழ்ச்சிசென்னை ஓமந்தூரார் தோட்ட அலுவலகத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் கருணாநிதி சிலையை […]
- தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது- மோடி பெருமிதம்பொங்கல், புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை தமிழ் மொழி நிலையானது,அதன் கலாச்சாரம் உலகளாவியது என […]
- ரூ.31500 கோடியில் திட்டங்கள்- பிரதமர் துவக்கி வைத்தார்தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் பிரதமர் […]
- இதுதான் திராவிட மாடல் -மோடியின் முன்பு ஸ்டாலின் பேச்சுபல்வேறு திட்டங்களை துவக்கிவைக்க பிரதமர் மோடி தமிழக வந்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் திராவிடமாடல் குறித்த […]
- சிந்தனைத் துளிகள்• வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது.அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமேவேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம். […]
- பொது அறிவு வினா விடைகள்1.குரோனா நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?சுவீடன்2.உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 113.உலக […]
- குறள் 215:ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு.பொருள் (மு.வ):ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், […]
- தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி…ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், […]
- வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.35.000 சம்பளத்தில் 26 காலிப்பணியிடங்கள் ..தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் […]
- சென்னைக்கு ஒரு நாள் பயணம்… நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு…பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் […]
- ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்உலகின் அளவில் ஸ்மார்ட் போன் டேட்டா பயன்பாட்டில்இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.ஐதராபாத்தில் […]