• Sun. Nov 23rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிமுக சார்பில் 5000 பேருக்கு அன்னதானம்..,

ByKalamegam Viswanathan

Jun 19, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெரும் திருவிழா கடந்த ஜூன் இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 17 நாட்கள் நடைபெற்றது திருவிழாவின் நிறைவு நாளான தீர்த்தவாரி திருவிழா நேற்று இரவு வைகை ஆற்றில் நடைபெற்றது.

தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு மாலை 5 மணிக்கு ஜெனகை மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து வைகை ஆற்றில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தரிசனம் தந்தார் தொடர்ந்து ஊஞ்சலாட்டம் நடைபெற்றது. தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகில் அதிமுகமதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் கழகம் சார்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் மான ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பேரூர் செயலாளர் முருகேசன் வரவேற்றார்.

அம்மா பேரவை மாநில நிர்வாகி வெற்றிவேல் பேரூர் செயலாளர் முருகேசன் வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் அண்ணா முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ் முன்னாள் பேரூராட்சி தலைவர் எம் கே முருகேசன் பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன் ரேகா ராமச்சந்திரன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி நாச்சிகுளம் வழக்கறிஞர் தங்கப்பாண்டி தென்கரை இராமலிங்கம் மருத்துவர் அணி கருப்பட்டி கிளைச் செயலாளர் கருப்பையா மன்னாடிமங்கலம் ராஜபாண்டி கல்லாங்காடு ராமு பேரூர் துணை செயலாளர் தியாகு ஒன்னாவது வார்டு பேட்டை செயலாளர் முத்துக்குமார் பேட்டை மாரி சுரேஷ் ராஜா பாலா முன்னாள் கவுன்சிலர் மருது சேது பாசறை அழகர் ஜெயபிரகாஷ் துரைக்கண்ணன் ஏழாவது வார்டு மணி பத்தாவது வார்டு மணிகண்டன் சங்கங்கோட்டை சரத் போது அண்ணா தொழிற்சங்கம் சக்திவேல் தென்கரை முருகன் குருவித்துறை விஜய் பாபு வழக்கறிஞர்காசிநாதன் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.