பாஜகவை தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என அதிமுக அறிவித்துள்ளது.
நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தினை 5-2-2022 (சனிக்கிழமை) அன்று காலை 11-00 மணி அளவில், தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூட்டியுள்ளார்.
இது தொடர்பாக, ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கிடுமாறு கடந்த 3ஆம் தேதி முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார்.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனத்து கட்சி கூடம் நடைப்பெறவுள்ளது. இந்நிலையில், நீட் விவகாரம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என அறிவித்துள்ளது.
மேலும், கூட்டத்தில் பங்கேற்காத போதும், நீட் தேர்வில் இருந்து விலக்கு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும் அதிமுக விளக்கம் அளித்துள்ளது. கடந்த முறை நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பரிந்துரைத்த கருத்துகளை தமிழ்நாடு அரசு முறைப்படி செயல்படுத்தவில்லை என்பதால் இன்றைய கூட்டத்தை புறக்கணித்ததாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, நீட் விலக்கு மசோதாவை சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பினாலும் அது திரும்பி வரும் என்பது நன்றாகத் தெரிந்தும் அதனை வைத்து அரசியல் செய்யலாம் என்பது தப்புக் கணக்கு எனவும் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கண் துடைப்பு என்பதால் பாஜக பங்கேற்காமல் விலகிக் கொள்ளும் எனவும் கூறி அனைத்துக் கட்சி கூட்டத்தை பாஜக புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
- பேரூராட்சி அலுவலகம் முன் வார்ட் உறுப்பினர் போராட்டம்நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பேரூராட்சி 13வது வர்ட் உறுப்பினர் கிரிஜா இவர் […]
- பதக்கங்களை கங்கையில் வீசி ஏறிந்த டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள்எங்கள் பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசுவோம் என்று […]
- சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு5வது முறையாக கோப்பையை வென்று சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஐபிஎல் தொடரில் […]
- சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக தொண்டரே காரணம் – அண்ணாமலைகுஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்த ஜடேஜா […]
- ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம்தமிழ்நாட்டில் ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் […]
- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி நடத்த வேண்டும் என தமிழக பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு […]
- நரிக்குறவர்கள் சாதிச் சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!நரிக்குறவர்கள் எஸ்.டி சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் […]
- மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது..,மாற்றுத்திறனாளிகள் ஆணையர் கடிதம்..!பல்வேறு அலுவல் காரணமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து […]
- பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒருநாள் மூடப்படும் ஈஷா யோகா மையம்..!ஆண்டுதோறும் மே 30ஆம் தேதியன்று நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் ஈஷா யோகா மையம் மூடப்படுவதாக […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 177: பரந்து படு கூர் எரி கானம் நைப்பமரம் தீயுற்ற மகிழ் தலைஅம் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒளிந்திருக்கும் திறமை..!! ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]