ஒரு ஜப்பானிய மீன் வியாபாரிக்கு ஓர் ஏரியில் மீன் பிடிக்க அனுமதி (லைசென்ஸ்) வழங்கப்பட்டிருந்தது. மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்ட நேரம் இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை. அந்த வியாபாரியும் அவருடைய மகனும் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். வெகுநேரம் தூண்டிலில் எந்த மீனும் அகப்படவில்லை.
அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நேரம் முடிகிறது. அதேநேரம் அவரது மகன் போட்டிருந்த தூண்டிலில் ஏதோ அகப்படுகிறது. இழுத்துப் பார்க்கும் போது ஓரு பெரிய மீன், மிகப்பெரிய மீன், அவர்கள் இதுவரை பார்த்திராத அளவு பெரியதாக இருந்தது. ‘வாவ்’ என்று மகன் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தான். ஆனால் அவனது தந்தை சொல்கிறார்…
“மகனே அந்த மீன் நமக்கு வேண்டாம், அதை மீண்டும் ஏரியிலே விட்டு விடு”
“ஏன் ? “
“நமக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது. அதனால் அது நமக்குச் சொந்தமில்லை.”
“ஜஸ்ட் இப்போது தானே முடிந்தது. அதுவும் இதை யாரும் பார்க்கவே இல்லையே அப்பா !”
“யாரும் பார்க்காவிட்டால் என்ன..? அப்படி ஒரு குற்ற உணர்வுடன் அதைச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமா.. யோசித்துப் பார் மகனே”
கலங்கிய கண்களுடன் அந்த மகனும் அந்த மீனை ஏரியிலே விட்டு விடுகிறான்.
ஆண்டுகள் பல ஓடுகின்றன. அதே ஏரிக்கரை. அந்தப் பெரியவர் இல்லை. அந்த மகனும் அவனுடைய மகனும் வந்திருக்கிறார்கள். அன்று நடந்த சம்பவத்தை தன் மகனுக்கு விவரிக்கிறார். சொல்லிவிட்டு,
“அன்று என் தந்தை சொல்லியதைக் கேட்டதால் அந்த மீனை மட்டும் தான் இழந்தேன். ஆனால் அவர் என் மனதில் பதித்த அந்த நேர்மையால் வாழ்க்கையில், வியாபாரத்தில் எனக்குக் கிடைத்த நற்பெயர் சாதாரணமானதல்ல.. அன்று நான் அந்த அரிய மீனை எடுத்துப் போயிருந்தால் என்ன நேரிட்டிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். அதில் ஒன்றும் தவறு இருப்பதாக எனக்கு அப்போது தோன்றவில்லை. என்ன கொஞ்சம் அதிகம் பணம் கிடைத்திருக்கும். ஆனால் அப்படிச் செய்திருந்தால், அதுவே ஒரு “ருசி காண வைத்த” செயலாக மாறியிருக்கும். ஒரு தவறு செய்வதும், அதை செய்யாமல் இருப்பதும் ஒருவித மனோபாவம் தான். ஆனால் அதை ஒருமுறை செய்யத் தொடங்கிவிட்டால், செய்யப் பழகிவிட்டால் அதை விட முடியாது. பிறகு என்றாவது ஒருநாள் அசிங்கப் பட்டுத்தான் போயிருப்பேன். நான் சொல்வதை ஏற்றுக் கொள்கிறாயா மகனே…”
அந்த மகனுடைய மகனின் களங்கமற்ற அந்த புன்சிரிப்பில் நேர்மை இல்லாமலா இருக்கும் !
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]