• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் – பவர்ஸ்டார் சீனிவாசன் வேண்டுகோள்

Byதன பாலன்

Mar 21, 2023

புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’. அறிமுக இயக்குநர் துரை முருகன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் மறைந்த கவிஞர் புலமைப்பித்தன் பேரன்திலீபன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தீப்தி மானே நடித்திருக்கிறார் ஜி. சிவராமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.கே. சசிதரன் இசையமைத்திருக்கிறார்

இப்படத்தில் இடம்பெறும் பாடல்களை மறைந்த புலவர் புலமைப்பித்தன் விவேகா, கானா பாலா, ஏகா ராஜசேகர் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். ஏப்ரல் ஏழாம் தேதியன்று வெளியாகவிருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகை ஷனம் ஷெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினார்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன் கவிஞர் மதுரா, வழக்கறிஞர் மோகன், புலமைப்பித்தனின் உதவியாளரான குணசேகரன்,உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். மறைந்த புலவர் புலமைப்பித்தனின் மனைவியும், ‘எவன்’ படத்தின் தயாரிப்பாளருமான திருமதி தமிழரசி புலமைப்பித்தனும் கலந்துகொண்டார்.

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசுகையில்,

” எவன் படத்தின் டைட்டில் சூப்பராக இருக்கிறது.. கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். நான் ஒரு முறை படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் தருணத்தில் தம்பி திலீபன் அருகே மாடியிலிருந்து டுப் போடாமல் குதிக்கும் சண்டைக்காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார்.‌

எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. நான் ஒரு படப்பிடிப்பில் சிறிது தூரத்திற்கு நடக்கும் போது வழுக்கி விழுந்து முதுகு தண்டில் அடிபட்டு சிகிச்சை பெற்றேன்.நான் பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்காமல் நடித்ததால் விபத்தில் சிக்கினேன். தற்போது சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக குணமடைந்து, தற்போது ‘பிக்கப்’ எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.2008 ஆம் ஆண்டில் நான் திரையுலகிற்குஅறிமுகமானனேன். இதுவரை 100 படங்களில் நடித்திருக்கிறேன். நூறாவது படம் தான் ‘பிக்கப்’. தம்பி திலீபன் நடித்திருக்கும் ‘எவன்’ திரைப்படம், ஏப்ரல் ஏழாம் தேதி அன்று 360 திரையரங்குகளில் வெளியாகிறது என்றார்.

படம் உலகம் முழுவதும் பெரிய வெற்றியை பெற வேண்டும். திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓட வேண்டும். இல்லையெனில் நான் ஓட வைத்து விடுகிறேன்.

என்னுடைய ‘லத்திகா’ திரைப்படத்தில் மறைந்த புலமைப்பித்தன் ஐயா எழுதிய ‘நீங்க நல்லா இருக்கணும்..’ என்ற பாடலை கண்டிப்பாக வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு, அவரிடம் அனுமதி பெற்று வைத்தோம்.இந்த பாடலுக்காகவே அந்த படம் 350 நாட்கள் ஓடியது. அவருடைய பேரன் திலீபன் நடித்திருக்கும் ‘எவன்’ படமும் கண்டிப்பாக ஓடும். இந்த படம் வெற்றி பெறுவதற்கு அவருக்கு உறுதுணையாக இருப்பேன். அவர் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து திரையுலகத்தில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும். என்னுடைய படத்திலும் அவர் நடிக்க வேண்டும். அவருடைய படத்திலும் நான் நடிப்பேன்.ஊடகங்களுக்கு நான் ஒரு அன்பு வேண்டுகோள். என்னை பற்றி தவறான செய்திகளை வெளியிடாதீர்கள். ஏன் அப்படி? அவதூறான செய்திகளை வெளியிடுகிறீர்கள் என எனக்கு தெரியவில்லை. இதனால் உங்களுக்கு என்ன லாபம்? என்றும் எனக்கு தெரியவில்லை. ஆனால் அது என்னை மிகவும் பாதிக்கிறது.. ஊடகங்களை எப்போதும் நான் என்னுடைய வளர்ச்சிக்கான கண்களாகத்தான் காண்கிறேன். எனக்குவாய்ப்புகிடைத்திருக்கிறது. அதனை பயன்படுத்தி கொள்கிறேன். ‘பிக்கப்’ என்ற படத்திற்கு ஒரே ஒரு போஸ்டரை மட்டும்தான் வெளியிட்டேன். இதுவரை அந்த போஸ்டரை மட்டும் மூன்று கோடி பேர் பார்த்திருக்கிறார்கள் என்றார்.